இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை. இளஞ்சேரன் -
9, அன்னைக்குத் தெரியுமடி போடி!
அன்னை:
கண்ணான மகளுக்குத் தோழி,
கனிவாகப் போய்ச்சொல், நீ போடீl புண்ணாகி நோகின்றாள், அந்தப்
பொன்னாளன் பிரிவென்னும் தீயால்; தண்ணீரைத் தலைமேலே விட்டேன்;
வெந்நீராய் வழிந்தோடக் கண்டேன்; கண்ணுக்கும் மையெழுத மாட்டாள்;
கடுகிப்போய் மாற்றிடுவாய், போடி!
34
மகள்:
கண்ணுக்குள் அவருறையும் போது
கண்ணுக்கு மையெழுதின், அத்தான் பொன்னுடலம் கரு மையாய்ப் போகும்;
போடீ, போ நானெழுத மாட்டேன்; என்னிதழில் 'வண்ணந்தீட் டென்றாய்;
எழிலத்தான் எனையணைத்தே இட்ட பொன்னிதழின் முத்திரைகள் போகும்;
போயிதனை இப்படிச்சொல் லாதே!
35
24