இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
சீரகச்சம் பாவரிசி செழும்பாலிற் பொங்கிச் சிரிக்கின்ற மல்லிகைபோற் சிதற வைத்து, மேலே மோரகன்ற வெண்ணெயிலே முறுகாத பாகை முழுகவிட்ட அமுதமதை உண்ணவழைத் தன்னை 'ஊரடங்கிற் றெனவுரைத்தாள்; உள்ளறையில் அவளோ, ஊசிபட்ட புழுப்போலக் குழவிபெறத் துடித்தாள்; ஆரணங்கு துடிக்குங்கால் அமுதெனக்கோர் சுவையோ ? ஆண்பிறந்தான் எனக்கேட்டால் அமுதெனக்கோர்
சுவையோ ?
44
(எண்சீர்
ஆசிரிய விருத்தங்கள்]
29