இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை. இளஞ்சேரன்
17. புளித்த காதல்.
அவன்:
சால்புடைய என்காதற் பெருமை யெல்லாம் சாற்றினையோ தலைவியிடம், அருமைப் பாங்கி
பாங்கி: :
வேல்விழியாள் கேட்டணளே கேட்ட பின்னர் வேலிருக்கத் தான்கண்டேன்; விழியை கானேன்.
೨೧ನ:
பால்வழியும் என்முகந்தான் என்றே நீயும் பாவைக்குச் சொன்னாயோ?
பாங்கி:
சொன்னேன், சொன்னேன்;
'பால்வழிந்து வீணாகிப் போகு முன்னர் பாற்பண்ணை வைக்கச்சொல் போe என்றாள்.
- 7|
அவன்:
எச்சமிலா என்காதற் கிசைவா ளானால் எடுபிடியாய், இனியவனாய், அன்னாள் உள்ளம் நச்சுகின்ற படியெல்லாம் உருவம் மாறி நானவட்கு நிழலெனவே நடப்பே னென்று 'கச்சிதமாய்க் கழறினையோ?
48