இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
18. குறிஞ்சிக் கிழவனும்
குறும்புத் தோழியும்
குறிஞ்சிக் கிழவன்:
முல்லை மலரினைக் கிள்ளிவிட்டாள்-உடன்
முத்துச் சிரிப்பெதற் கள்ளிவிட்டாள்? கொல்லிக் குமரியாள் எக்களித்தே-என்னைக்
கொள்ளவோ தள்ளவோ கொக்கரித்தாள் ?
குறும்புத் தோழி:
பல்லுமக் கலர்ந்த பாங்கினையே-ஒத்துப்
பார்த்திவள் முல்லையென் றேங்கினளாம்
கிழவன்: o
செல்லி யெனுமொரு சேயிழையாள்-இதைச்
செப்பினள் முன்னமே, ஆயிழையே! 75
தோழி:
விரிந்த முல்லையுன் பல்லெனிலோ-விண்டு
விட்டுத் தெறித்திட்ட கல்லலவோ ? பரிந்தச் செல்லியாள் பேசியதோ, உன்னைப்
பழிக்கச் சொற்களை வீசியதே;
5|