பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : இரண்டு - 27 18.இடம்படு வீடிடேல் வீடு - ம்னக்கோலுங்கால், இடம் - அதனுள் அமையு மில்லம், படு - வினே கெடும்படியாக, இடேல் - அமைக்காதே என்பதாம். 鲁。 வீண் டம்பத்தினல் வீட்டைப் பெருக்கக்கட்டி அதற்குத் தக்க செலவு செய்யாவிடினும் இல்லம் பாழ்படும். அதனை யாளும் மக்களில்லாவிடினும் பாழ்ப்படும், என்பது கருத்தாம். இதனை யநுசரித்தே “சிறுகக்கட்டி பெருக வாழ்க வேண்டும்” என்பதும் ஒர் பழமொழியேயாம். ஆங்கிலேயர்கள் பெருகக்கட்டி ப் பெருக வாழ்கின்ருர்களே அவ்வில்லம் படுவதற் கேதுவில்லை. யோமென்பாருமுண்டு. கனத்தின் பேரில் வளைவென்பது போல் வரவுக்குத் தக்க செலவு செய்யுங் கனவான்களுக்கு அஃது பொருந்துமேயன்றி செலவிற்கே போதாத வரவுள்ள ஏழைகளுக்குப் பொருந்தாவாம். உலகத்தில் நூறு கனவான்க ளிருப்பார்களாயின் லஷம் ஏழைகளிருப்பார்க ளென்பது திண்ணம். ஆதலின் பகவனது சத்ய தர்மத்தைப் பின்பற்றிய சங்கத்தோர்கள் யாவரும் தங்கள் சீர்திருத்த போதங்களை செல்வமற்ருேர்க் கூட்டி சிறப்புப் பெறச் செய்வதியல்பாம் வீதியிற் போக்குவருத்துள்ளவர்கள் பார்த்து மெச்சவேண்டிய டம்பங்கொண்டு வீதியின் பெருந் திண்ணை, சிருந்திண்ணை, நடைத்திண்ணை, சார்பு திண்ணை முதலியவை களைக் கட்டிவிட்டு உள்ளுக்கு நுழைந்தவுடன் உட்காருவதற் கிடமின்றி ஒலை குடிசைகள் போட்டுக்கொண் டிருப்பவர்களு முண்டு. இதனனுபவங் கண்டோர் உட் சுவரிருக்கப் புறச் சுவரு பூசுவோர் என்று கூறும் பழமொழியு முண்டு இத்தியாதி டம்பச் செயல்களை அநுபவத்தி லறிந்துள்ள ஞானத்தாய் வீணே இடம்படும்படி வீடு இடேல் என்று விளக்கியுள்ளாள். 19. இணக்கமரிந்திணங்கு இணக்கம் - ஒருவரை - யடுத்து வாழ்க வேண்டுமாயின், அரிந்து - அவரது குணுகுணங்களை நன்காராய்ந்து, இணங்கு - நேசஞ் செய்வா யென்பதாம்.