பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 () , க. அயோத்திதாளலப் பண்டிதர் பெருத்த வியாபாரி தனது கூட்டத்தில் காசிகுப்பி, வளையல், கீரை மணி, சந்தனப்பேழை, தந்த மோதிரம், ஆணிக்கோர்வை, பச்சை முதலியப் பொருட்களைக் கொண்டுவந்து அரசனிடம் இரட்டித்தப்பொருள் சம்பாதிக்கலா மென்னு மாசையால் அவ்விடமுள்ள வோர் சோலையில் வந்து தங்கியிருந்தான். அவற்றை யறிந்த பூருசிகர்கள் அவ்விடஞ்சென்று அவர்களுடைய தேககாத்திரத்தையும், பாஷை மாறுதலையு மறிந்து, இத்தேசத்தில் ஆந்திரபாஷையை ஒர் கூட்டத்தோர் சாதிக்கும் சாதனை கண்டு ஆந்திரசாதியோரென்றும், கன்னட பாஷையை வோர்க் கூட்டத்தோர் சாதிக்கும் சாதனைக் கண்டு கன்னடசாதியோ ரென்றும், மராஷ்டக பாஷையை வோர்க் கூட்டத்தோர் சாதிக்கும் சாதனைகண்டு மராஷ்டக சாதியோ ரென்றும், திராவிட பாஷையை வோர்க் கூட்டத்தோர் சாதிக்கும் சாதனை கண்டு திராவிட சாதியோரென்றும் வழங்கி வந்த வற்றுள் மலையனுாரான் கூட்டத்தோர் சாதிக்கும் பாஷையானது இம்மிலேச்சர்களுக்கு விளங்காது விழிக்குங்கால் மலையனு ரான் திராவிட பாஷையில் பேசும்படியாரம்பித்தான். அவற்றை யறிந் தானந்தமுற்று அவனைத் தனித்தழைத்துப்போய் நீங்களெல்ல வரும் ஒரு பெருங்கூட்டமாக யிவவிடம் வந்ததை ஆலோசிக்கு மளவில் உங்களுக்கு நல்லகாலம் பிறந்ததென் றெண்ணத்தகும். அவை யாதென் பீரேல், இத்தேசத்தரசனை சுவாமி யாவாகனஞ் செய்துக்கொண்டவுடன் சொற்பக் குடியான வனைக் கொண்டு வந்து அரசாளும்படி வைத்திருக்கின்றோம் அவலிைதை யாளக்கூடிய சக்தி யில்லாதபடியால் உங்கள் வியாபார மூட்டைக ளெல்லாவற்றையும் சிலரிடம் வ்ொப்படைத்து விட்டு மற்றவர்களெல்லோரும் யுத்தமுகத்தராய் நின்று ஒவ்வொருவர் கையில் கோலுங் குண்டாந்தடியு மேந்தி நாளையுதய மூன்றே முக்கால் நாழிகைக்கு மேல் ஒரே கூட்டமாக வந்து அரசன் மனையில் நுழைந்துவிடுவீர் களானல் உங்களுடன் அவனை யெதிர்க்காமல்படி வோட்டி விடுகின் ருேம். நீங்களோ தேசத்தைக் கைப்பற்றிக்கொண்டு உங்கள் வியாபாரங்களைச் செவ்வனே நடத்திக்கொள்ளுவதுடன் அரசாங்க வதிகாரச்செயல்கள் யாவற்றையும் எங்க ளுத்திரவின்