பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி நான்கு 6 7 அக்கால் அரசன் சேஷனென்பவனை நோக்கி ஐயா மடாதிபதிகளைத் தாங்கள் சாங்கைய குலத்தவர்களல்லவா வென்றீர்களே அதன் காரணமென்ன அவற்றை விளக்கு வீராக வென்ருன். சேஷனென்பவ னெழுந்து ஒரு சமஸ்கிருத சுலோகத் தைச்சொல்லி, கலைக்கோட்டார் மான் வயிற்றிலும், கெளசிகர் காசி ராஜனுக்கும், ஜம்புகர் நரியின் வயிற்றிலும், கெளதமர் பசுவின் வயிற்றிலும், வால்மீகர் வே. ச்சி வயிற்றிலும், அகஸ்தியர் கும்பத்திலும், வியாசர் செம்மடகதி வயிற்றிலும் வசிட்டர் தாசியின் வயிற்றிலும், நாரதர் வண்ணத்தி வயிற்றிலும், கெளண் டன்னியர் முண்டச்சி வயிற்றிலும், மதங்கர் சக்கிலிச்சி வயிற்றிலும், மாண்டெளவியர் தவளை வயிற்றிலும், சாங்கையர் பறைச்சி வயிற்றிலும், கார்க்கேயர் கழுதை வயிற்றிலும், செளனகர் நாயின் வயிற்றிலும் பிறந்தவர்க ளென்பதாக மனு ஸ்மிருதி கூறுகிறபடி யால் இவர்களை பறைச்சி வயிற்றிற் பிறந்த சாங்கிய குலமல்லவா வென்று கேட்டேனென்ருன். உடனே அச்சபையிலிருந்த நத்தனரென்பவ ரெழுந்து இராஜேந்திரா இந்த புருசீக தேசத்தார் சோழபதியில் பிராமனவேஷ மணிந்து குடிகளை யேமாற்றிக் கொண்டு வருவதை மடாதிபர்களு மவர்களைச் சார்ந்த உபாசகர் களு மறிந்து இவர்களை யடித்துத் துரத்து வதுமல்லாமல் இவர்க ளனைந்துள்ள பிராமண வேஷ விவரங்களையும் பறைந்து வந்த தில்ை தங்களுக்குள்ளாக ஒருவருக்கொருவர் மடாதிகளைக் காணும்போது தங்களது பொய்வேஷங்களைக் குடிகளுக்குப் பறைகிறவர்களென்றும், தங்கள் பொய்ப் போதனைகளுக்குள் சேராதப் பராயர்களென்றும், பகர்ந்து வந்தவர்கள் மடாதிபர்களைத் தங்கள் முன்னிலையிற் கண்ட வுடன் பறையரென்றும், வெட்டி யாரென்றும் இழிவுபடுத்த வாரம்பித்துக் கொண்டார்கள். அதாவது இவர்களது பிராமண வேஷங்களையும், தந்திர - 领队 * - - - - - வு பாயங்களையும், குடிகளுக்குப் பறைபவர்கள் பறைபவர் களெனக் கொடுந்தமிழில் பறைந்துகொண்டே திரிந்தார்கள். இரண்டாவது பறைவோர், பறையோரென வழங்கி வந்தார்கள்.