பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9-4 - க. அயோத்திதாஸ்ப் பண்டிதர் பெண் சாதியும், நீருக்கு வைத்துள்ள நாராயண மென்னும் பெயரை ஒர் ஆணுருவாக்கி அவனுக்கு சிவணியென்னும் பெண் சாதியும், மண்ணுக்குக் கொடுத்துள்ள பிரமமென்னும் பெயரை ஒர் ஆணுருவாக்கி அவனுக்கு பிரம்மணியென்னும் பெண் சாதியு மேற்படுத்தி கல்வியற்றக் குடிகளுக்கும், காமியமுற்ற சிற்றரசர்களுக்கும் போதித்து இத்தேவர்களை வணங்கி வருவீர்களாயின் தன சம்பத்து, தானிய சம்பத்து புத்திர சம்பத்து பெற்று வாழ்விர்களென மயக்கி சிலாவனக்கங் களைப் பெருக்கிக்கொண்டே வரவும் அவற்றைக் காணும் பெளத்த வு பாசகர்களுக்கு மனஞ்சகியாது மிலேச்சராம் ஆரியர்களை அடித்துத் துரத்தவுமுள்ளச் செய்கைகளே இருவகுப்பாரையும் பெரும் விரோதத்துக்காளாக்கி வருகின்றது. ஆரியராகிய மிலேச்சர்கள் பிராமண வேஷ மணிந்து பெளத்தர்களுக்குள்ள யதார்த்த பிராமணர்களது மகத்துவங் களைக் கெடுக்கவும், அதன் சாதன சிறப்புகளை அழிக்கவும், அவர்களது தன்ம சாஸ்திரங்களைக் கொளுத்தி தங்களது அதன்ம சாஸ்திரங்களைப் போதிக்கவும் பெளத்தர்களால் வகுத்திருந்த தொழிற்பெயர்கள் யாவையும் சாதி மேற்சாதியென்று மாற்றியும், பெளத்தர்களின் ஞானச்செயல்கள் யாவையும் அஞ்ஞானச் செயல்களாக்கியும் ஒற்றுமெயுற்று வாழ்ந்துவருங் குடிகளை சாதிபொய்யாகிய கட்டுப்பாடுகளில்ை ஒற்றுமெய்க் கெடச் செய்தும், வித்தையிலும், புத்தியிலும் பீகையிலும் சன்மார்க்கத்திலும்.நிறைந்து சதா வுழைப்பிலும், நிதா சுறுசுறுப் பிலும் மிகுந்தக் குடிகளே கல்லுகளையுங் கட்டைகளையும் தெய்வ மெனத் தொழுது கடைச் சோம்பேறிகளாவ தைக் கண்ணுற்றுவரும் பெளத்தன்ம விவேகிகள் புருசிக தேசத்தோர் பொய்வேஷங்களிலுைம், பொய்ப் பேதங்களிலுைம் இந்திர தேசக் குடி கள் சீரழிவதையும் இன்னும் மேலுமேலும் சீரழிந்து வருவதையுங் கண்டு மனஞ்சகியாது இம்மிலேச்சர்களைக் கண்டயிடங்களிலெல்லாம் அடித்துத் துரத்துவதே பெளத்ததர்மக் கூட்டத்துள் விவேகமிகுத்தவர்களின் செயலாயிருக்கின்றது. இவ்வாரியரென்னு மிலேச்சர்களோ தங்களை வுயர்ந்தசாதி பிராமணர்களென வேஷமிட்டு தங்களது பொய்ப் போதகங்களுக் குட்பட்ட கல்வியற்றக் குடிகளையும் காமியமுற்ற