பக்கம்:சகுந்தலா.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா ア9 சகுந்தலேயின் மனப்பண்பைப் புரிந்துகொள்ள இயல வில்லே. அது சுலபத்தில் முடியாது என்றே தோன்றியது. சில சமயம் புரிந்து கொள்வதற்கு என்ன இருக்கிறது? அவள் பெரிய புதிரா என்ன ! சாதாரணமான பெண். எல்லாப் பெண்களேயும் போல அவளும் ஒருத்தி. கல் யாணம் அவளுக்கு ஏமாற்ற மளித்திருக்கலாம். அது வேதனேயை வளர்ப்பதாக, அவளது தன்மைகளே ஒடுக்கு வதாக இருக்கலாம். அதற்காக அவள் சில சமயம் வருத்தப் படுவதும் இயல்பே. இயற்கைக் குணமான விளையாட்டுத் தனம் எப்பொழுதாவது தலே தூக்கிவிடுவதும் சாத்தியமே. இன்றைய சமூக கிலேயில் அனுதாபம் கொள்வதானுல் ஒரு சகுந்தலேக்காக மாத்திரம் வருத்தப்பட்டுப் பிரயோசன மில்லே. அனுதாபத்திற்கு ஆளாகவேண்டியவர்கள் எத்தனே எத்தனையோ பேர்!’ - கசப்புற்ற அவன் மனம் அநாவசியமாக போதித்து மகிழ்ந்தது. உலகு இப்பொழுது விளேயாட்டுப் பிள்ளே. என்றுமே அவளிடம் இந்தக் குணம் டிேத்து நிற்கும் என்று சொல்ல முடியாது. சூழ்கிலேயும் சமூக அமைப்பும் வாழ்க்கை முறையும் அவளே அப்படி வாழ விடாது...... r சட், இதென்ன கினேப்பு உலகத்தையே தூக்கி நிறுத்தப் போகிறவனைப் போல் பிரமாதமான சிந்தனே களில் இறங்கி விட்டேனே !! என்று தன்னைத் தானே கடிந்து கொண்டான். பயனில்லாமல் மூளைக்கு வேலே கொடுப் பதை விடச் சுகமாகத் தூங்கில்ை நல்லது என்று கினைத் தான். கொஞ்ச நேரம் ஒய்வு எனக் கண்களே மூடிக் கொண்டு கிடந்தான் அவன். ரகுராமன் கண் விழிக்கும்போது நேரம் வுேகமாக ஓடி விட்டது என்பதை உணர்ந்தான். இரண்டு ம்ணி நேரத் திற்கு அதிகமாகவே யிருக்கும் போல் தோணுதே ' என்று வருத்தமடைந்தான். தூக்கக் கிரக்கத்துடன் அவன் நாற் காலியில் சாய்ந்திருந்த போது, இன்னும் துர்க்கம்: போகலேயா ?' என்று கேட்டபடி வந்தர்ள் உலகு. - அவன் முன் வந்து கின்ருள். நான் அப்போ ஒரு தடவை வந்து பார்த்தேன். உங்களுக்கு நல்ல தூக்கம். அதனுல் பேசாமல் போயிட்டேன். ஆமா, நீங்க கதவைத் தாழ்ப்பாள் போடாமலே துரங்கிட்டேளே? யாராவது உள்ளே புகுந்து எதையாவது எடுத்துக்கொண்டு போயிட்டால்? என்ருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/81&oldid=814837" இலிருந்து மீள்விக்கப்பட்டது