#16 சங்ககாலச் சான்ருேர்கள்
தோடு ஒரு சிலர்க்கே கூறிய அமுத மொழிகள் காலத் தையும் வென்று காசினிக்குப் பயன்படும் அழியாத் தன்மை பெற்று விளங்குகின்றன :
பெரியீர், யான் ஆண்டில் முதியவனே ; ஆயினும், கரையின்றி விளங்கல் எவ்வாருே எனக் கேட்கின்றீர். அதற்குரிய காரணங்களேக் கூறுவேன் : மாட்சி மிக்க பண்புகள் கிறைந்தவள் என் மனேவி. அவளோடு என் மக்களும் அறிவிற்சிறந்தோராய் விளங்குகின்றனர். என் துடைய ஏவலாளரும் யான் கருதிய அதனேயே கருதும் பண்பு உடையவர்கள். என் வேந்தனகிய பாண்டியனும் முறையற்றன செய்யாது, அறம் காக்கும் மாண்பு மிக்க செங்கோலன். அதற்கு மேலே யான் வாழும் ஊரின் கண்ணே கற்பண்புகள் கிரம்பிப் பணிய வேண்டிய பெரி யோரிடத்தே பணிந்து ஐம்புலனும் அடங்கிய கோட்பாட் டினே உடைய சான்ருேர் பலர் உள்ளனர், என்னுங் கருத்தமைந்த
யாண்டுபல ஆக நிரைஇல் ஆகுதல் யாங்(கு)ஆகியர்!’ என வினவுதிர் ஆயின், மாண்டவன் மனைவியொடு மக்களும் நிரம்பினர்; யான்கண் டனையர்என் இளையரும் ; வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும் ; அதன்றலே ஆன்றவிந்(து) அடங்கிய கொள்கைச் சான்ருேர் பலர்யான் வாழும் ஊரே. (புறம். 191) என்னும் பாடலேக் கூறினர்.
வாழ்க்கையின் திராப்பிணிகட்கு எல்லாம் அடிப் படைக் காரணம் கவலை, கவலே கவலையே ஆகும் அறி வியல் துறையில் எவ்வளவோ முன்னேறியும், அன்பும் அருளும் ஆண்மையும் இன்றி இந்த உலகின் அகவாழ்வு அழிந்துகொண்டே இருப்பதற்கான காரணம், கவலையே ஆகும். அக்கவலே நோய் வீட்டில்-ஊரில்-காட்டில்