பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

சங்ககாலத் தமிழ் மக்கள்


பெருமிதமுடைமையினையே புலவர்கள் தங்கள் பேறாகக் கருதினார்கள். அதனல், நாடாளும் பெருந்திருவெய்திய வேந்தரையொத்த தலைமையும் அவர்கள்பால் நிலைபெறுவதாயிற்று.

வள்ளல்களால் ஆதரிக்கப்பெற்ற புலவர், பாணர், கூத்தர், பொருநர், விறலியர் என்னுமிவர்கள், தங்களை ஆதரித்த பெருவள்ளல்கள்பால் தாங்கள் பெற்ற பெருஞ் செல்வத்தைத் தங்களைப் போன்ற ஏனைப் பரிசிலர்களும் பெற்று மகிழும்படி அவ்வள்ளல்களிடம் வழி கூறி அனுப்புவார்கள். இப்படி வழி கூறி அனுப்பும் முறை ‘ஆற்றுப் படை’ என வழங்கப் பெறும்.

ஊண், உடை, உறையுள் என்பவற்றை நாடிப் பெறும் முயற்சி, வாழ்க்கையின் முதற்படியாகும். வயிறார உண்டு மகிழ்தலே எல்லாருடைய விருப்பமுமாகும். அருளும் ஆற்றலும் நிரம்பிய பெருவள்ளல்கள் பசியால் துன்புறும் எளியவர்களுக்கு வேண்டும் உணவளித்து அவர்களை ஊக்கத்துடன் உழைக்கும் கல்லுணர்வுடையவர்களாகச் செய்தார்கள். தங்களை அடைந்தவர்களுடைய வயிற்றுப் பசியைத் தணித்தலே இவ்வள்ளல்களின் வாழ்க்கைக் குறிக்கோளாய் அமைந்தது. பரிசிலர் சுற்றத்துப் பசிப் பகையாகி விளங்கிய இவ்வள்ளல்களை நாடாளும் மன்னர்களும் பாராட்டிப் போற்றினர்கள். சோழன் குள முற்றத்துத் துஞ்சியகிள்ளிவளவன் ஆட்சியில் சோழநாட்டிலுள்ள சிறுகுடி என்னும் ஊரின் தலைவனாய் விளங்கிய பண்ணன் என்பான், பசியால் வருந்தி வரும் எளியவர்களுக்குப் பெருஞ்சோறு கொடுத்துப் போற்றி வந்தான். பிறர் வறுமை நோக்கி உதவும் பண்ணனது பேரறச் செயலை வேந்தர் பெருமானாகிய கிள்ளிவளவன் கேள்வியுற்றான்; பண்ணன் வாழும் சிறுகுடிக்குச் சென்று அவ-