164,
அதியன் விண்ணத்தனார்
புடைய நினக்கு, இன்று இவ்வேண்டுகோளை ஏற்றுக் கோடல் இயலாததொன்றன்று” என்று கூறினாள்.
கணவனும், மனைவியுமாகிக் காதல் வாழ்வு வாழ்தல், ‘’அறவோர்க் களித்தல், அந்தணர் ஒம்பல், துறவோர்க் கெதிர்தல், தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர்கோடல்" ஆய இவற்றை இனிது ஆற்றுதற்கே ஆம்; இவற்றை இருவரும் கூடியிருந்தே ஆம் ஆறுதல் இயலும், ஒருவரை இன்றி, ஒருவர் ஆற்றுதல் இயலாது; அந்நிலையில், இல்லறத்தே ஒருவர் தனித்து வாழ்வதால் பயன் இன்றாம்; பயன் இன்றி ஆண்டு வாழ்வதினும், அவ்விடத்தின் நீங்கி, வேறிடம் சென்று வாழ்தலே நன்றாம்; இதை உணர்ந்தவள் தோழி; தலைவனும் இதை உணர்வான்; தலைவனின் தகாவொழுக்கினைப் போக்குதல் வேண்டின், அவன் ஒழுக்கத்தால், அவன் இல்லறக்கடன் அழிகிறது என்பதை அவனை உணருமாறு செய்தல் வேண்டும் என்பதை உட்கொண்டே ‘’ஐய! நீ பிரிந்த பின்னர் ஈண்டு வாழ்வதால் பயனில்லை; ஆகவே, எம்மை, எம் தந்தைபால் அனுப்பிவிடுக!' என்று கூறினாள்.
கடனறி உள்ளமுடைய தோழியின் அறிவெல்லாம். புலப்படுமாறு அழகிய பாட்டொன்று பாடி, அதன்வழியே தம் அறிவின் பெருமையினை உலகுணரச் செய்துள்ளார்: புலவர்,
‘’நீர்நீ டாடின் கண்ணும் சிவக்கும்;
ஆர்ங்தோர் வாயில் தேனும் புளிக்கும்;.
தணந்தனை யாயின்எம் இல்லுய்த்துக் கொடுமோ!
அந்தண் பொய்கை எங்தை எம்மூர்க்
கடும் பாம்பு வழங்கும் தெருவில்
நடுங்கஞர் எவ்வம் களைந்த எம்மே."
(குறுங் : ௩௫௪)
தந்தைவிடு செல்ல விரும்புவது, ஆண்டுச்சென்று, அவனை மறந்து இன்புற்று றுவாழ்தற்கன்று; அவனையின்றி