பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கயத்தூர்க்கிழான்

165

இவ்வுலகில் வாழ்வதினும் இறந்துபோதலே நன்றாம் என்ற எண்ணத்தினாலேயேயாம்; ஆகையால் அன்றோ, தந்தை வீட்டினைக் குறிப்பிடுங்கால், கடும்பாம்பு வழங்கும் இடம் எனக் குறித்தாள்; அது கடும்பாம்பு வாழும் இடம்; அப்பாம்பினின்றும் எம்மைக் காப்போன் நீ; இன்று எம்மோடு இல்லை; ஆகவே, இன்று எம்மைக் காப்பார், அவண் எவரும் இலர்; காக்கப் பெறாமல், அப்பாம்பால் கடியுண்டு இறத்தலை வேண்டுகிறோம் என்றன்றோ அவள் கருதுகிறாள்! என்னே அவள் துயர் !