விடுவேன் கொல்? என்றே அஞ்சுகின்றேன்,” என்று கூறித் தன் முதிர்ந்த அன்பை முன்னிறுத்திக் காட்டினாள்:
“தோளும் அழியும் நாளும் சென்றன;
நீளிடை அத்தம் கோக்கி, வாளற்றுக்
கண்ணும் காட்சி தெளவின; என்னிந்து
அறிவு மயங்கிப் பிறிதா கின்றே;
நோயும் பேரும்; மாலையும் வந்தன்று;
யாங்கர குவென்கொல்? யானே; ஈங்கோ
சாதல் அஞ்சேன்; அஞ்சுவல், சாவின்
பிறப்புப் பிறிதாகுவ தாயின்,
இவ்வாறு கூறினாள் ஒருபெண் எனப் பாடிய இப்பாட்டு,
“துறக்கப் படாத உடலைத் துறந்துவெந் தூதுவரோடு
இறப்பன்; இறந்தால் இருவிசும்பு ஏறுவன்;
ஏறிவந்து பிறப்பன்; பிறந்தால், பிறையணி வார்சடைப் பிஞ்ஞகன்பேர்
என்ற நாவரசர் வாக்கை நினைப்பூட்டி, நினைக்குந்தொறும். கழிபெரும் களிப்பினைத் தந்து நிற்றல் காண்க.
தான் விரும்பிய தலைவற்குத் தன்னை மணம் செய்து தாரார் என உணர்ந்த தலைவி ஒருத்தி, அவனூர் சென்று மணந்து வாழத் துணிந்துவிட்டாள்; அதற்கு அவனும் இசைந்துவிட்டான்; குறித்த நாளன்று இருவரும் புறப்படலாயினர்; அந்நிலையில், தலைவியின் உயிர்த் தோழியாய், அவள் மேற்கொண்ட வினைக்கெல்லாம் உறுதுணை புரிந்தாளொருத்தி, அத்தலைவனை நோக்கி, “அன்ப! தன் தவறு. கண்டு தாய் தன்னே அடித்துத் துன்புறுத்தும் அக்காலத்திலும், குழந்தை அம்மா! எனக்கூவி அவளேயே அணைந்து நிற்கும்; இதைப்போல், நீ இவட்கு இன்பமே தரினும் மாருகத் துன்பமே தரினும் இவள் நின்னல் புரக்கப்படுவளாவள்; தன் உறுதுயரைத் துடைத்துப் போக்குவார் பிறர் எவரையும் இவள் பெற்றிலள்; ஆதலின் இவளை