92
அதியன் விண்ணத்தனார்
னுரை வழங்கி விருந்தளிப்பர் எனவும், பரதவர் இவ்வாறு விருந்தளிக்கும் பண்பினராகவே, அவர்தம் பரதவர் சேரியில் ஒருநாள் இருந்து விருந்துண்டார், தாம் வாழும் ஊரைப் பலநாள் மறந்துவிடுவர் எனவும், பரதவர்தம் பண்புடைமைகளைப் பலபடப் பாராட்டியுள்ளார் புலவர் :
“வேட்டம் பொய்யாது வலைவளம் சிறப்பப்
பாட்டம் பொய்யாது பரதவர் பகர
இரும்பனம் தீம்பிழி உண்போர் மகிழும்
ஆர்கலியாணர்.'” (நற் : ௩.அ)
“பெயினே, விடுமான் உழையினம் வெறுப்பத் தோன்றி
இருங்கதிர் கெல்லின் யாணர் அஃதே ;
வற்ப்பின், மாரீர் முண்டகம் தாஅய்ச் சேறுபுலர்த்து
இருங்கழிச் செறுவின் வெள்ளுப்பு விளையும்
அழியா மரபின் நம்மூதுார்.'” (நற் : கூகக)
"வல்லெதிர் கொண்டு, மெல்விதின் வினே இத்
துறையும் மான்றின்று பொழுதே ; சுறவும்
ஒதம் மல்கலின் மாறா யினவே :
எல்லின்று ; தோன்றல் செல்லாதிம்; என
எமர்குறை கூறத் தங்கி, ஏமுற
இளையரும் புரவியும் இன்புற, யுேம்
இல்லுறை நல்விருந்து அயர்தல்
ஒல்லுதும் பெரும !” (அகம்: .90)
"ஒருநாள் உறைந்திசி னோர்க்கும், வழிநாள்
புலவர் உலோச்சனார் ஆங்காங்கு எடுத்தாளும் உவமைகள் அறிந்து இன்புறத்தக்கனவாம் ; புன்னைமரத்தின் கருநிறக்கோடு இரும்புபோல் உளது; அப்புன்னையின் நீலநிற இலைகள் நீலமணிபோல் உள; அதன் வெண்ணிறப் பூக்கள் வெள்ளி பூத்தாற்போன்று காட்சிதரும்; அம் மலரின் பொன்னிறப் பூந்தாது, பொன் தூள் போலும் எனக் கூறும் உவமை, புலவர்தம் பொன் முதலாயின.இந்த அறிவின அறிவித்து அழகுதந்து நிற்றல் காண்க.