ஒரேருழவர் 15
கணமே அவனுக்கு வேண்டும் நீர் அளிக்கவல்ல வழி வகைகள் பலப்பல இன்றுள்ளன.
ஆகவே, இத்தகைய சூழ்நிலையில் நடைபெறும் இன்றைய உழவுத் தொழிலையும், உழுபவனேயும் மட்டுமே அறிந்தவர்களால், ஒரேர் உழவர் உள்ளத்தை உணர்தல் இயலாது ; அவர் வாழ்ந்த காலத்தில், உழவுத்தொழில் நடைபெறுதற்காம் சூழ்நிலையினையும், அச் சூழ்நிலையில் நின்று தொழில்புரிந்த அக்கால உழவனேயும் உணர்ந்தவர் களாலேயே அவர் பாட்டின் பொருள் உணர்ந்து பாராட்ட முடியும்; ஆதலின் அக்கால உழவனேச் சிறிது அறிந்து
கொள்வோமாக.
கிலத்திற்குரியவன் வேறு அங்கிலத்தை உழுபவன் வேறு என்ற கிலே பண்டு இல்லை ; கிலத்திற்குரியவனே கிலத்தை உழுதல் வேண்டும்; ஒவ்வொருவரும் ஏதோ ஒர் அளவுள்ள கிலத்தைத் தங்களுக்கெனப் பெற்றிருந்தனர் ஆதலின், பிறர்கிலத்தில் கூ லி க் கு உழவுத்தொழில் புரிவோர் அரியாயினர்; ஆகவே, தன் கிலத்தில் பிறர் உழுது பயன் அளிப்பர் என கிலமுடையோன் எதிர் பார்த்தல் இயலாது; இதனல், கிலம் படைத்தோன் உழவுத் தொழிலின் துட்பங்களை உணர்ந்தவனுய் விளங்கின்ை ; ஏரின் அருமை, நீரின் இன்றியமையாமை, பருவத்தே பயிர்செய்யவேண்டிய பண்பு ஆகிய இவற்றை அவன் நன்குணர்ந்திருந்தான்்; தன்தொழிலைத் தான்ே முடித்தல் வேண்டும்; தன்கையே தனக்குஉதவி என்ற அறிவு அவன்பால் அமைந்திருந்தது.
வாழ்வதற்கான வழிகள் இ ன் று வகைவகையாக வளர்ந்து தோன்றுவதேபோல், பண்டு விரிந்து விளங்க வில்லை. பண்டைக்கால மக்கள் அனைவரும் உழவுத்தொழில் ஒன்றையே நம்பி உயிர்வாழ்ந்திருந்தனர்; அதுவன்றி வேறுதொழில்களை அவர்கள் அறிந்திருந்தார்கள் என்று கூறுதல் அருமையே; ஆதலின், வாழவேண்டும் என்று