கங். விட்ட குதிரையார்
தமிழிலக்கியச் செய்யுட்களுள் மக்களுக்குத் திருக்கிய பண்பாட்டினே உணர்த்தவல்லன. அகத்துறை தழுவிய செய்யுட்களே ஆம்; அவ்வகத்துறையினுள் பெண்களின் பண்பு நலங்கள் பலவும் தோன்றி விளங்கும் இடம் கள வொழுக்கமே ஆதலின், புலவர்களெல்லாம் அக்கள வொழுக்கக் கைகோள் பற்றியே பெரிதும் பாடுவா ாயினர். விட்ட குதிரையார் பாடிய பாடலாக நமக்குக் கிடைத்துள்ள ஒரு பாட்டும் இக் களவொழுக்க நெறி .யினேயே உணர்த்துகிறது.
தலைவியின் அன்பைப்பெற்ற தலைமகன் ஒருவன் கள வொழுக்க நெறியிலேயே மேலும் சில நாள் செல்ல விரும் பினன் தலைவியைக் களவிற் காணல் அரிது என்பதையும் அவன் அறிவான் ; பலநாள் முயன்றும் அவளைக் காண மாட்டாது வறிதே மீண்டும் உள்ளான்; என்ருலும், அவன் உள்ளம் அக் கள வொழுக்க இன்ப்த்தையே பெரிதும் விரும்புவதாயிற்று. -
ஒருநாள் தலைமகள் ஊர் சென்ருன்; அவள் தோழி யைக் கண்டான்; தன் விருப்பத்தினை ஏற்குமாறு வேண்டி ன்ை; அவளும் அதை ஏற்றுக்கொண்டு கலைமகளை எவ் வாற்ருனும் ஆண்டுக் கொணர்வதாகக் கூறிச்சென்ருள் ; சென்று தலைமகளைக் கண்டாள்; தலைமகளோ, அவனைக் காணமாட்டாமையால் கொண்ட துயரம் சினமும் உடை .il J6)j3IT/T L} &# 5ff Tt llJf. LfTGT,
- கோழி, மக்களின் உள்ளப்பண்பு உணர்ந்தவள் ; இந் நிலையில், அவளிடம் தலைவன் விருப்பத்தினைக் கூறினல், கம்கிலை குறித்து வருந்தாது, அவன்கிலே குறித்து வருந்து கின்றனளே எனச் சினப்பள் என அறிவாள்; ஆகவே, * தலைமகன் பெரிதும் அறிவற்றவன்; அவனே எண்ணி எண்ணி வருந்தும் நம் வருத்தத்தினை அறியாது கொன்னே உளனே' என்று தொடக்கத்தில் தலைவனப் பழித்தாள்