பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடத்தாமக் கண்ணியார் 93

ஆண்டுள்ள நிலவொளி போலும் வெண்மணலிடத்தே விறல்பட ஆடி மகிழும்; குறிஞ்சி கிலப் பொருள்களாகிய தேனையும், கிழங்கையும் கொண்டு வந்து விற்றவர், மருத நிலப் பொருள்களாய மீன் எண்ணெயும், கள்ளும் வாங்கிச் செல்வர்; மருதநிலப் பொருள்களாய கரும்பையும், அவலையும் விற்றவர், குறிஞ்சி நிலப் பொருள்களாய மானிறைச்சியும், மதுவும் பெற்றுச் செல்வர்; குறிஞ்சி' கிலப் பண்ணை, நெய்தல் கிலத்தார் பாடி மகிழ்வர் ; நெய் தல் சில மலர்களால் ஆய கண்ணியைக் குறவர் சூடி மகிழ் வர் ; முல்லை நிலத்து ஆயர், மருகப் பண் பாடி மகிழ்கொள் வர் ; மருத கிலத்து உழவர், நீல நிறத்தை உடைய முல்லைக் கொடி மணக்கும் முல்லை கிலத்தே சென்று, அங்கிலம் பாடிப் பரவுவர்; முல்லை கிலத்துக் கோழிகள், மருத நிலத்து நெற்கதிரைத் தின்னும் ; மருத கிலத்துக் கோழி கள், குறிஞ்சி கிலத்துத் தினைக்கதிரைத் தின்னும் ;. குறிஞ்சி கிலத்து மலைகளில் வாழும் மந்திகள், நெய்தல் கிலத்துட் புகுந்து கழிநீரில் ஆடி மகிழும்; நெய்தல் நிலத்துக் கழிகளில் வாழும் நார்ைகள், குறிஞ்சி கிலத்து மலைகளில் சென்று தங்கும் ; இவ்வாறு நானில வளமும் கனி மிகக் கொண்ட நன்குடு சோளுடு எனப் புலவர் நாவாாப் போற்றும் திறம் அவர் புலமைக்குப் பெருமை யளிக்கும் பெருஞ் செயலா மன்ருே !

சுறவழங்கும் இரும் பெளவத்து இறவருங்கிய இனநாரை, பூம் புன்?னச் சினைச் சேப்பின் ஒங்குதிரை ஒலிவெரீஇத் தீம் பெண்ணை மடல் சேப்பவும் ; கோள் தெங்கின், குலே வாழைக் கொழுங் காக்கள், மலர் நாகத்துத், துடிக் குடிஞைக் குடிப் பாக்கத்து யாழ் வண்டின் கொளைக் கேற்பக் கலவம் விரித்த மடமஞ்ஞை நிலவு ஏக்கர்ப் பலபெயாத்;