பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

థా

18 மாநகர்ப் புலவர்கள்

உடைய இவன் முன்னுேன் கலங்கிள்ளியின் நற்பண்பு எங்கே! இவன் இழிகுணம் எங்கே இவனே அவன் தம்பி என, எவ்வாறு கொள்வது? உண்மையில் இவன் அவளுேடு பிறந்தவனுகான்; இவன் பிறப்பில் ஐயம் உண்டு என்றெல் லாம் எண்ணி வருந்தினர் எண்ணியதோடு கின்றாம் அல்லர், சினம் மிகுதியால், அவர் எண்ணம் சொல்லுருப் பெற்றுவிட்டது:

கேட்டான் மாவளத்தான்் ; இதற்குள்ளாகவே, புல வர் தவறிலர் என்பதையும் அறிந்து கொண்டான்; அதனால், புலவர் கூறும் வன்சொற்கள், அவனுக்குச் சினத்தை மூட்டிற்றில; மாருக, அவன் தலேயை வணங்கச் செய்தன; தான்்செய்த பிழைக்கு வருக்தின்ை ; புலவரை எறிந்ததை எண்ணி எண்ணித் துயர் உற்ருன் மாவ ளத்தான்் காணம், புலவர்க்குப் பெருமகிழ்ச்சி அளித் தது; வட்டு மறைந்திருந்தது தம்மிடத்தில் அதனல் தவறு தம்முடையதே; தவறு செய்த தம்மை, மாவளத் தான்் எறிதலில் தவறு இல்லே அவன்பால் தவறு இல்லே யாகவும் அவனேப் பழித்தது, தாம் மறுவலும் செய்த பெரும்பிழையாம்; இவ்வாறு, தவறுமேல் தவறு செய் தோர் தாமாகவும், தான்் தவறு செய்யாமலும், தவறு செய்தான்்போல் தாம் கூறிய வன்சொற்களேக் கேட்டும், சினங்கொள்ளாது, மாருகப் புலவர் கோவன செய்து விட்டோமே என்று எண்ணிய எண்ணத்தால், நாணித் தலை வணங்கி நின்ற மாவளத்தான்ின் பேருள்ளம் கண்டு பெரிதும் வியந்தார்; செவிகைப்பச் சொற் பொறுக்கா வேந்தரே உலகில் மிகப்பலராவர் ஆனால் இவனே, பிறர் கூறிய பழிகளேயும் பொறுக்கும் பண்பும் உடையனவன் ; இக்குணம், இவனுக்கு, இவன் பிறந்த குடியால் வந்த பெரும் பண்பு. இவன் குடிவந்தார், தமக்குப் பிழை புரிந் தாரையும் பொறுக்கும் பேருள்ளம் படைத்தோராவர்; அவர் குடிவழிவந்து அப்பண்பு மாருது மாண்புற்ற இவன், இவர்களுக்குரிய காவிரி, கொண்டுவந்து குவிக்கும் மணலி ஆணும் பல்லாண்டு வாழ்ந்து வளம்பெருகுவாளுக! என்று