. I & சங்கர ராசேந்திர சோழன் உலா 84. சூடிய பாண்டியனும் சேரனும் சூடாது கோடி பொழில்அழிக்கும் கொல்யானை-ஆடற் 85. பணக்கும் அயிரா பதம்புக் கதனை இணைக்கும் புரசைஎருத் தேறிக்-குணிக்கரிய வீதியில் வருதல் 86. தானப் புணரி தரும்குமிழி ஓங்கியென வானைக் கவிகை மதிகவிப்பச்-சேனை 87. உவரி மரக்கலமுன் ஒதம்மலைத் தென்னக் கவரி கரிமுன் கறங்கப்-புவனியோர் 88. பண்ணரும் சித்திர காயப் பதாகைகரும் புண்ணரும் போதலரி யோடாட-மண்நிரந்து 84. பாண்டியன் சூடியது வேம்பு. சேரன் சூடியது பன. பாண் டியனும் சேரனும் வெற்றி பெருமையின் தங்களுக்குரிய அடையாள மாலேயைச் சூடாமற் போனதன்றி, நடுகல்லில் அணிந்தும் பரணி எழுதியும் வேம்பும் பனையும் ஒழிந்தமையின், அவற்றைச் சூட எண் னினும் கிடையாத நிலை உண்டாயிற்று என்று கற்பனை செய்தார். ஆடல் - வெற்றியில். 85. பணக்கும் - பெருத்திருக்கும். அயிராபதம் - ஐராவதம்: சோழன் யானையையே இந்திரன் யானையாகக் கூறினர். இணைக்கும் - கட்டுகின்ற, புரசை எருத்து - கயிறு கட்டிய பிட்ரி, குணிக்கரிய - எண்ணுவதற்கரிய. 86. தானப்புணரி - சேனையாகிய கடல். கவிகைக்குக் குமிழி உவமை. கவிகையாகிய மதி. 86-7. சேனையாகிய கடலில் யானையாகிய கலத்துக்கு முன் கவரி யாகிய அலைகள் மோதின. உவரி-கடல். ஒதம் - அலே, கறங்க - சுழல. 88. சித்திர காயப் பதாகை - புலிக்கொடி. சுரும்பு உண் அரும் போது அலரியோடு - வண்டு உண்ணுவதற்கரிய, பொழுதைக் காட்டும் சூரியனேடு. போது அலரி என்பது பொழுதிலே மலரும் மலருக்கும் ஆதலின் அதை விலக்க, சுரும்பு உண்ண்ரும் போத்லரி என்ருர் : வெளிப்படை. தொடி சூரிய மண்டலத்தள்வும் ஓங்கி அசைந்தது. மண் நிரந்து - பூமியில் வரிசையாக நின்று.