உவமை வகைகள் 21
பத்துப்பாட்டு
நகைதாழ்பு துயல்வரும் வகையமை பொலங்குழை சேண் விளங்கு இயற்கை வான்மதி கவைஇ அகலா மீனின் அவிர்வன இமைப்ப. -பத். 1/36-90
முள் அரைத் தாமரை முகிழ்விரி நாட்போது கொங்குகவர் நீலச் செங்கட் சேவல் மதிசேர் அரவின் மானத் தோன்றும். பத். 3/183-185
மாரிக் குன்றம் மழைசுமந் தன்ன ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடம் பத்.-4/49.50
நீள் அரை இலவத்து இலங்குசினை பயந்த பூளை அம் பசுங்காய் புடைவிரிந் தன்ன வரிப்புற அணிலொடு. -பத். 6/84-85
பொன்எறி மணியின் சிறுபுறம் தாழ்ந்தஎம் பின்னிருங் கூந்தல். -பத். 9/59-60
மாமலை அணிந்த கொண்மூப் போலவும்
தாய்முலை தழுவிய குழவி போலவும்
தேறுநீர்ப் புணரியொடு யாறுதலை மணக்கும்.
-பத். 9/95-97
படுத்துவைத் தன்ன பாறை மருங்கில்
எடுத்துநிறுத் தன்ன இட்டுஅருஞ் சிறுநெறி.
-பத். 10/15-19
12.5. இல்பொருள் உவமை
இல்லாத பொருளை உவமையாகக் கொண்டு வந்து சித்திரிக்கும் அழகை இல்பொருள் உவமை என்பர். இதனைத் தண்டியலங்காரம் அபூத உவமை என்று கூறும்.
12.5.1. ஞாயிறும், திங்களும் ஒன்று சேர்ந்து மண்ணகத் திற்கு வருவது என்பது நடவாத ஒன்று; நிகழ முடியாத செயல் ஆகும். ஞாயிறும் திங்களும் ஒன்று சேர்ந்து இணைந்து பூமிக்கு வருதல் போலத் தமிழக மன்னர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து பகை மன்னர்களை வென்றனர் என்று கூறப்படுகிறது.
1. தண்டி பக். 50.