132
சங்க இலக்கியத்
“கேட்டாயோ தோழி! ஓங்கு மலைநடான் ஞாயிறு அனையன், என்னுடைய பெரிய தோள்கள் நெருஞ்சி மலரை ஒத்தன” என்று கூறுகின்றாள்.
“.... .... .... ஓங்குமலை நாடன்
ஞாயிறு அனையன் தோழி!
நெருஞ்சி அனைய என்பெரும் பனைத்தோளே”
-குறுந். 315 : 2-4
நெருஞ்சிப் பூ கதிரவனை எதிர் கொண்டழைப்பதாக மோசி கீரனார் பாடுகின்றார்:
“பாழுர் நெருஞ்சிப் பசலை வான்பூ
ஏர்தரு சுடரின் எதிர் கொண்டாங்கு”
-புறம்: 155 : 5-6
இங்ஙனம், எதிர் கொண்டழைக்கும் நெருஞ்சி மலர், கதிரவன் நெறியில் தொடரும் என்றார் திருத்தக்கதேவர்.
“நீள்சுடர் நெறியை நோக்கும்
நிறையிதழ் நெருஞ்சிப்பூ”[1]
இச்சிறப்பியல்பு பெற்ற நெருஞ்சிச் செடி பாழ்பட்ட வெற்றிடங்களில் வளரும்; பல கிளைகளை விடும். கிளைகள் மண் மேல் ஊர்ந்து நீண்டும், பரவியும் வளரும். இவ்வுண்மைகளைப் பதிற்றுப் பத்தில் காணலாம்.
இதனைக் குமட்டூர் கண்ணனார் என்னும் புலவர், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுடைய வெற்றிச் சிறப்பைப் பாடுங்கால், அவனது படைகள் பகைவனுடைய நாட்டை நெருஞ்சிச் செடி பரந்து வளரும் பாழிடமாக அழித்து விட்டன என்று கூறுகின்றார்!
“ஊரிய நெருஞ்சி நீறாடு பறந்தலை
தாது எருமறுத்த கலிஅழி மன்றத்து”
-பதிற். 13 : 16-17
இதில் நெருஞ்சிச் செடியின் கிளைகள், தரையின் மேல் ஊர்ந்து படர்ந்து வளருமென்னும் உண்மை கூறப்படுகிறது.
- ↑ சீ. சிந்: 461