பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

மஞ்சரி : இலைகளுடன் கிளை நுனியில் தனியாக மலர் உண்டாகும்.
மலர் : 6 அங்குல அகலமான மிகப் பெரிய வெண்ணிற மலர்.
புல்லி வட்டம் : 5 புறவிதழ்கள் விரிந்து இருக்கும்.
அல்லி வட்டம் : 5 அகன்ற அகவிதழ்கள் பிரிந்து இருக்கும்.
மகரந்த வட்டம் : அடியில் தாதிழைகள் இணைந்தும், உட்புறத்துத் தாதிழைகள் வளைந்தும், அகவிதழ் மடல்களுக்கு உள்ளேயும் வெளிப்புறத் தாதிழைகள் வெளியே வளைந்து மடல்களுக்கு மேலேயும் வளரும்.
தாதுப் பை : தாதுப் பைகள் நீளமானவை. நுண் துளைகள் மூலமாகத் தாது வெளிப்படும்.
சூலக வட்டம் : 5–20 சூலக அறைகள் சூலகத் தண்டில் ஒட்டியுள்ளன. பல சூல்கள்.
கனி : உருண்டையானது. சதைப் பற்றான புல்லிகள் ஒட்டிக் கொண்டிருக்கும்.

இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 54 என ஹாபாக்கோ ஹியோநியோவா கணக்கிட்டுள்ளார்.

இம்மரத்தைக் கோயில் தோட்டங்களில் வளர்க்கிறார்கள் என்பார் காம்பிள்.