இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தாவரங்கள்
245
தாவரச் சிற்றினப் பெயர் | : | மார்சூப்பியம் (marsupium) |
சங்க இலக்கியப் பெயர் | : | வேங்கை |
பிற்கால இலக்கியப் பெயர் | : | திமிசு, திமில், கணி |
உலக வழக்குப் பெயர் | : | வேங்கை |
தாவர இயல்பு | : | ஓங்கித் தழைத்து வளரும் வலிய மரம். இலையுதிர் காடுகளில் வளரும். |
இலை | : | கூட்டிலை; 5-7 சிற்றிலைகள். அகன்றவை; தடித்தவை. நடுவில் அகன்றும், இது மேலும், கீழும் குறுகியுமிருக்கும். |
மஞ்சரி | : | நுனி வளராப் பூந்துணர். கலப்பு மஞ்சரி போன்று .தோன்றும். இலைக் கோணத்தில் வளரும். |
மலர் | : | மஞ்சள் நிறமானது. |
புல்லி வட்டம் | : | வளைந்த புனல் வடிவானது. 2-4-2 புறவிதழ்கள் மேலுங் கீழுமாக அமைந்திருக்கும். |
அல்லி வட்டம் | : | நீண்ட 5 தனித்த அகவிதழ்கள். பதாகை இதழ் அகன்று பளபளப்பாகவும், மஞ்சள் நிறமாகவும் காணப்படும் நீள் சதுரப் பிளவுபட்டிருக்கும். |
மகரந்த வட்டம் | : | 10 தாதிழைகள்; இரு தொகுதியாக இருக்கும். தாதுப் பைகள் ஒரே மாதிரி மாதிரியானவை. |
சூலக வட்டம் | : | ஒரு செல் உடையது. சூல்தண்டு உள் வளைவானது; சூல்முடி குல்லாப் போன்றது. 2-6 சூல்கள். |
கனி | : | உலர் கனி. பாட் (Pod) எனப்படும். தட்டையானது. இரு பக்கத்திலும் சிறகு போன்ற அமைப்பானது. ஒரு விதையே உள்ளது. |