பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

246

இம்மரம் 4,500 அடி உயரமான மலைப்பாங்கில் இலையுதிர் காடுகளில் தழைத்துக் கிளைத்து ஓங்கி வளரும். இதன் தண்டு அடிமரம் மிக வலிமையானது. கட்டிட வேலைக்குப் பயன்படுவது. பழுப்பு மஞ்சள் நிறமானது. இம்மரத்தில் நீண்டு, அழகிய கோடுகள் காணப்படும். இதில் செந்நிறப் பிசின் (Red-Gum) உண்டாகும். இது மருந்துக்கு உதவும். இம்மரம் பூத்திருக்கும் போது இதன் தோற்றப் பொலிவு மிக அழகானது. இதன் காய்களை முள்ளம் பன்றிகள் தின்று விடுவதால் இம்மரம் இயற்கையில் அருகி வருகிறது.