பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

369


“சிறு வெள்ளருவித் துவலையின் மலர்ந்த
 கருங்கால் நுணவின் பெருஞ்சினை வான்பூ”

-அகநா. 345 : 15-16


தாவர இயலில் தணக்கம் ரூபியேசி என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. இதற்கு மொரிண்டா கோரியா (Morinda coreia) என்பது தாவர இரட்டைப் பெயர். இதற்கு மொரிண்டா சிட்ரிபோலியா (M. citrifolia) என்று ‘பெடோம்’ என்பவரும், மொரிண்டா டிங்டோரியா (M. tinctoria) என்று, ராக்ஸ்பெர்க் என்பவரும் பெயரிட்டனர். எனினும், இக்காலத்தில் இதன் தாவரப் பெயரை மொரிண்டா கோரியா என்பர். இதன், குரோமோசோம் எண்ணிக்கை 2n = 22 என இராகவன் டி. எஸ். அரங்கசாமி (1941) என்போர் கூறுவர்.

மொரிண்டா என்னும் இப்பேரினத்தில், 5 சிற்றினங்கள் தமிழ்நாட்டில் காணப்படுகின்றன,

மொரிண்டா எனும் இப்பேரினம் கருநாடகம் முதல் திருவனந்தபுரம் வரையில், வறண்ட காடுகளிலும், மலைப் பகுதிகளிலும் வளர்கின்றது என்றும் ‘காம்பிள்’ கூறுவர்.

தணக்கம்—நுணா தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : அகவிதழ்கள் இணைந்தவை; இன்பெரே
தாவரக் குடும்பம் : ரூபியேசி (Rubiaceae)
தாவரப் பேரினப் பெயர் : மொரிண்டா (Morinda)
தாவரச் சிற்றினப் பெயர் : கோரியா (coreia)
தாவர இயல்பு : சிறு மரம், 10-15 மீட்டர் உயரமாகக் கிளைத்து வளரும். அடி மரம் மிக வன்மையான நாட்டு வண்டியின் நுகத்தடியாகப் (நுகம்) பயன்படும். மஞ்சள் நிறமானது. மஞ்சள் நாறி என்று இதனைக் கூறுவதும் இதனால் போலும்.
 

73–24