இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
486
சங்க இலக்கியத்
கணவிரம்—செவ்வலரி தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | பைகார்ப்பெல்லேட்டே |
தாவரக் குடும்பம் | : | அப்போசைனேசி |
தாவரப் பேரினப் பெயர் | : | நீரியம் (Nerium) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | இன்டிகம் (indicum) |
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் | : | அலரி, கணவிரை. கணவீரம் |
பிற்கால இலக்கியப் பெயர் | : | அடுக்கு, அலரி |
ஆங்கிலப் பெயர் | : | ஒலியாண்டர் (Oleander) |
தாவர இயல்பு | : | புதர்ச் செடி. 3-4 மீட்டர் உயரமாக அடர்ந்து வளரும். நான்கு வகைகள் காணப்படுகின்றன. |
தாவர வளரியல்பு | : | சீரோபைட் (Xerophyte) பாலை நிலத்தில் வளரும். |
இலை | : | சிறு காம்புள்ளது. மூவிலைத் தொகுப்படுக்கு நீளமானது. 10-16.5 செ.மீ. நீளமும், 2-2.5 செ.மீ. அகலமும், அடியிலும், நுனியிலும் வர வரக் குறுகி இருக்கும். நுனி கூரியது. தோல் போன்றது. பசிய நிறம். நடு நரம்பு மஞ்சள் நிறமானது. |
மலர் | : | இதன் மலரைக் கொண்டு இவற்றில் ஐந்து செடிகளாகக் காணலாம். மலர்க்குழல் மிகச் சிறியது.
|