பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/532

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

516

சங்க இலக்கியத்

“மனை மாமரம் வாள் வீரம்”-பரி. 11 : 19

என்புழி, பரிமேலழகர், ‘மனை மாமரம்’ இல்லம், ஆவது தேறு என்றனர். இது முல்லையுடன் கார் காலத்தில் பூக்கும். இதன் பூ காம்பிலிருந்து கழன்று உதிரும்.

“முல்லை இல்லமொடு மலர,
 . . . . . . . . . . . . . . . .
 கார் தொடங்கின்றே காலை காதலர்”
-அகநா. 364:7-9

இதன் பூவை முல்லை நிலத்தவர் குல்லை, குளவி, கூதளம். குவளை முதலிய பூக்களுடன் கணணியாகத் தொடுத்து அணிவர்;

“குல்லை குளவி கூதளம குவளை
 இல்லமொடு மிடைந்த ஈர்ந்தண் கண்ணியன்”

-நற். 376 : 5-6


எனினும், இப்பூ குறிஞ்சிப் பாட்டில் கூறப்படவில்லை.

இல்லம்—தேற்றாங் கொட்டை மரம் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே (Bicarpellatae)
தாவரக் குடும்பம் : லொகானியேசி (Loganiaceae)
தாவரப் பேரினப் பெயர் : ஸ்டிரிக்னஸ் (Strychnos)
தாவரச் சிற்றினப் பெயர் : பொட்டடோரம் (potatorum)
தாவர இயல்பு : மரம். 50 அடி வரையில் உயர்ந்து, கிளைத்து வளரும். ஏறக்குறைய 4000 அடி உயரமான மலைப்பகுதிகளிலும் காணப்படும்.
இலை : இரு முனையும் குறுகிய, நீண்ட சிற்றிலை. 6 அங் X 2.5 அங் இலை நரம்புகள் இணையிணையான நடு நரம்பிலிருந்து உண்டாகும்.