பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/673

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



657

இஞ்சி தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : எபிகைனே (Epigynae)
சைடாமினே (Scitaminae)
தாவரக் குடும்பம் : சிஞ்சிபெரேசி (Zingiberaceae)
தாவரப் பேரினப் பெயர் : சிஞ்ஜிபெர் (Zingiber)
தாவரச் சிற்றினப் பெயர் : அபிசினேல் (officinale)
சங்க இலக்கியப் பெயர் : இஞ்சி
தாவர இயல்பு : பல்லாண்டு வாழும் செடியாயினும், ஓராண்டில் இஞ்சிக் கிழங்கு முற்றி விடுவதால், தரையின் மேல் வளரும். தண்டும், இலைகளும் காய்ந்து விடும். ஆகவே ஓராண்டுச் செடி.
தண்டு : தரை மட்டத் தண்டு நுனியில் முளைத்து, தரைக்கு மேல் வளர்ந்து, இலைகளை விடும். இத்தண்டுதான் இஞ்சி எனப்படும் கிழங்கு.
இலை : நீளமானது. 5-13 அங்குல நீளமும், 4-6 அங்குல அகலமும் உள்ளது. காம்பில்லாதது; நுனி கூரியது; பளபளப்பானது.
மஞ்சரி : மேல் தண்டின் நுனியில் கம்பி போல் நீண்டு, மடலுடன் விரியும். 1.3-3 அங். நீளமானது. மடல், அகன்ற செதில் போன்றது. பளபளப்பானது. ஓர் அங்குல நீளமானது. நுனி மூன்று பிளவாக இருக்கும். இரு பக்கத்துப் பிளவுகள் குட்டையானவை.
மலர் : மலர்த் தண்டில் நேராக ஒட்டியிருக்கும் ‘ஸ்பைக்’ என்ற துணர். பசிய மஞ்சள் நிறமானது.
புல்லி வட்டம் : பொதுவாக ஒரு மலர் குழல் வடிவமானது. 3 பிளவானது
 

73-42