இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
657
இஞ்சி தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | எபிகைனே (Epigynae) சைடாமினே (Scitaminae) |
தாவரக் குடும்பம் | : | சிஞ்சிபெரேசி (Zingiberaceae) |
தாவரப் பேரினப் பெயர் | : | சிஞ்ஜிபெர் (Zingiber) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | அபிசினேல் (officinale) |
சங்க இலக்கியப் பெயர் | : | இஞ்சி |
தாவர இயல்பு | : | பல்லாண்டு வாழும் செடியாயினும், ஓராண்டில் இஞ்சிக் கிழங்கு முற்றி விடுவதால், தரையின் மேல் வளரும். தண்டும், இலைகளும் காய்ந்து விடும். ஆகவே ஓராண்டுச் செடி. |
தண்டு | : | தரை மட்டத் தண்டு நுனியில் முளைத்து, தரைக்கு மேல் வளர்ந்து, இலைகளை விடும். இத்தண்டுதான் இஞ்சி எனப்படும் கிழங்கு. |
இலை | : | நீளமானது. 5-13 அங்குல நீளமும், 4-6 அங்குல அகலமும் உள்ளது. காம்பில்லாதது; நுனி கூரியது; பளபளப்பானது. |
மஞ்சரி | : | மேல் தண்டின் நுனியில் கம்பி போல் நீண்டு, மடலுடன் விரியும். 1.3-3 அங். நீளமானது. மடல், அகன்ற செதில் போன்றது. பளபளப்பானது. ஓர் அங்குல நீளமானது. நுனி மூன்று பிளவாக இருக்கும். இரு பக்கத்துப் பிளவுகள் குட்டையானவை. |
மலர் | : | மலர்த் தண்டில் நேராக ஒட்டியிருக்கும் ‘ஸ்பைக்’ என்ற துணர். பசிய மஞ்சள் நிறமானது. |
புல்லி வட்டம் | : | பொதுவாக ஒரு மலர் குழல் வடிவமானது. 3 பிளவானது |
73-42