பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/693

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

677

“காந்தளங் கொழுமுகை காவல் செல்லாது
 வண்டு வாய் திறக்கும் பொழுதில்”
-குறுந். 265 : 1-2

என வரும் அடிகளில் காணலாம்.

காந்தள் மலரும் போது, மணம் வெளிப்படும். இதனை ‘மாரிக் குன்றத்து அருவி ஆர்த்த தண்நறுங் காந்தள்’ என்பதாலும், அந்த மணம் தலைமகளது நெற்றியில் பிறக்கும் மணத்திற்கு உவமிக்கப்படுவதை,

“சினை ஒண்காந்தள் நாறும் நறுநுதல்” -அகநா. 338 : 7

என்பதாலும் அறியலாம்.

காந்தள் மலரில் தாது மிகுதியாக உண்டாகுமாயினும், தேன் சுரப்பிகள் காணப்படவில்லை. எனினும், கொல்லி மலையின் மேற்குப் பக்கத்தில் பூத்த காந்தளில் தேனீக்கள் பாய்ந்து, தேனை நுகர்ந்து அடைகளில் தொகுத்தன எனவும், அந்த தேன் அடைகள் பல தொகுதியாக இருந்தன எனவும் நற்றிணை பகரும்.

“உரைசால் உயர்வரைக் கொல்லிக் குடவயின்
 அகல் இலைக்காந்தள் அலங்குகுலைப் பாய்ந்து
பறவை இழைத்த பல்கண் இறாஅல்
தேனுடை நெடு வரை. . . . . . . .”
ーநற். 185 : 7ー10

தேனுண்ணும் வண்டினம், தேனுடன் மலரில் உண்டாகும் தாதையும் சேர்த்து நுகரும். தேனை துண்ணோக்கியில் வைத்து உற்று நோக்கினால், தேனுடன் தாது மிகுதியும் இருப்பது தெரியும். இவ்வுண்மையை.

“சிலம்புடன் கமழும் அலங்குகுலைக் காந்தள்
 நறுந்தாது ஊதும் குறுஞ்சிறைத் தும்பி”
-குறுந் 239 : 3-4
“நறுந்தண் சிலம்பின் நாறுகுலைக் காந்தள்
 கொங்குண் வண்டின் பெயர்ந்து. . . . . . . .”
-ஐங். 226 : 2-3

என்று புலவர்கள் கூறுமாறு காண்க.

“சோலை அடுக்கத்துச் சுரும்புண விரிந்த
 கடவுட்காந்த ளுள்ளும் பலவுடன்”
-அகநா. 152 : 16-17
“சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தள்
 பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்”
-திருமுரு. 42-43