680
சங்க இலக்கியத்
இதைக் கண்ட கன்று தன் தாய்ப்பசுதானோ என ஐயுற்று மருண்டதாம். இதோ அப்பாடற்பகுதி :
“சிலம்பின் மேய்ந்த சிறுகோட்டுச் சேதா
அலங்குகுலைக் காந்தள் தீண்டித் தாதுக
கன்றுதாய் மருளும் குன்ற நாடன்”
-நற். 359 : 1-3
காந்தள் மலை நிலத்தைச் சேர்ந்த குறிஞ்சித் தாவரம். இது
“விண்பொரும் சென்னிக் கிளைஇய காந்தள்” -குறிஞ். 196
என்ற வண்ணம் மலையின் தலை உச்சியிலும்
“நெடுவரை மிசைஇய காந்தள் மெல்விரல்” -பொருந. 33
என்ற வண்ணம் மலையின் உடற் பகுதியிலும்,
“. . . . . . . . நறுங்கார் அடுக்கத்துப்
போந்தை முழுமுதல் நிலைஇய காந்தள்”
-அகநா. 238 : 15-16
என்ற வண்ணம் பக்க மலைகளிலும்
“. . . . . . . . . . . .காந்தள்
கொழமடல் புதுப்பூ ஊதும் தும்பி
நல்நிறம் மருளும் அருவிடர்”
-அகநா. 138 : 17-19
“. . . . . . . . . . . .விடர் முகைச்
சிலம்புடன் கமழும் அலங்கு குலைக்காந்தள்”
-குறுந். 239 : 2-3
என்ற வண்ணம் மலைப் பிளவுகளிலும்
“நெடும்பெருங் குன்றத்தமன்ற காந்தள்” -அகநா. 4 : 15
என்ற வண்ணம் பெருங்குன்றுகளிலும் வளருமென்தை அறியலாம். மேலும்,
“மலைச் செங்காந்தள் கண்ணி தந்தும்”
-நற். 173 : 2
“போதுபொதி உடைந்த ஒண் செங்காந்தள்
வாழையஞ் சிலம்பின் வம்புபடக் குவைஇ”
-நற். 176 : 6-7
“. . . . . . . . . . . .ஒண் செங்காந்தள்
கல்மிசைக் கவியும். . . . . . . . . . . .”
-குறுந்., 185 : 6-7