இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
764
சங்க இலக்கியத்
ஏனல்—தினை தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் ஒரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | குளுமேசி (Glumaceae) |
தாவரக் குடும்பம் | : | கிராமினே (Gramineae) |
தாவரப் பேரினப் பெயர் | : | செட்டேரியா (Setaria) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | இட்டாலிகா (italica) |
சங்க இலக்கியப் பெயர் | : | ஏனல் |
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் | : | தினை |
உலக வழக்குப் பெயர் | : | தினை, தெனை |
ஆங்கிலப் பெயர் | : | இட்டாலியன் மில்லெட் (Italian millet) |
தாவர இயல்பு | : | ஓராண்டுச் செடி. 5 அடி உயரம் வரை வளரும். இதன் தண்டு “கல்ம்” எனப்படும். |
இலை | : | குறுகிய, தட்டையான, சற்று நீண்ட இலை 6-18 அங். நீளமும் 0.4-1.4 அங் . அகலமும் உள்ளது. |
மஞ்சரி | : | கதிர் தனித்து செடியின் நுனியில் உண்டாகும். 12 அங். வரை நீளமானது. ‘ஸ்பைக்லெட்’ என்ற கதிரில் நீளமான நுண்ணிய முட்கள் இருக்கும். |
மலர் | : | மேற்புற ‘லெம்னா’ வழவழப்பானது. அடிப்புற ‘லெம்னா’வில் நீண்ட நுனியில் கூர்மையான ‘பாலியா’ இருக்கும். மலர் உண்டாகும். இதில் 2 ‘லாடிக்கியூல்’ இருக்கும். 3 தாதிழைகள் 2 சூல் தண்டுகள். |
கனி | : | செம்மஞ்சள் நிறமானது. தினை அரிசியை ‘லெம்னா’ ‘பாலியா’ என்ற உமி மூடிக் கொண்டிருக்கும். |