பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

கடவுளை நம்பினோர் கைவிடப்படார் அன்றோ ? இவள் பராவி வழிபட்ட கடவுள் இவட்கு நற்காலம் வருமாறு திருவுளங் கொண்டு புலவர் பெருமக்களைத் தூண்டினர். அத்தூண்டுதல் காரணமாகப் புலவர்கள் பேசுனைக் கண்டு அறிவுபுகட்டத் தொடங்கினர்.

பேகனைத் திருத்தக் கபிலர் செய்த முயற்சி

ஒரு முறை கபிலர் பேகனைக் காண இவன் வாழ்ந்த மலைப்பாங்கர் சென்றனர். அவர் சென்றதற்குக் காரணம், அவர் சுற்றம் பசியால் வாட்ட முற்றதனால் அதனைத் தீர்த்தற்கு ஆகும். பேகனைக் காணின், பசி நீங்கும் என்பது அவர் கருத்து. சென்றவர் முரசுபோல ஓசை செய்துகொண்டு, அருவி சொரிதலையும் அவண் ஓங்கிய மலையின் உயர்ச்சியையும் கண்டு, பேகன் மனையிடத்தின் வாயிலண்டைப் போந்து மலையினை வாழ்த்தி நின்றார். பேகன் ஆண்டு இலன். இவன் கண்ணகியைப் பிரிந்து வேற்று மங்கையுடன் வாழ்ந்து வந்தனன் என்பது முன்பே குறிப்பிடப்பட்டதன்றோ ?

கபிலர் பேகன் பெயரைச் சுட்டிப் பாடியதைக் கேட்ட கண்ணகி, தன் கணவன் பேரையேனும் காதால் கேட்ட உணர்ச்சி வயத்தளாய், வாயிற்கு வெளியே வந்தனள். அழுகையும் மிக்கது. அவ்வழுகையும் இனிமை தரத்தக்கதாகவே குழல் போல் இருந்தது. இந்நிகழ்ச்சியைக் கண்ட கபிலர், இரக்கம் மிகக் கொண்டவராய், அங்கு இருக்கவும் மனம் அற்றவராய்ப் பேகன் ஆண்டு, இல்லாமையை உணர்ந்து, அவன் உறையும் உறைவிடம் நேரே சென்றார்; பேகனைக் கண்டார். கண்டு “மழை பெய்ய