பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} |(} சடகோபன் செந்தமிழ் வயல்கள், இவற்றைக் கண்டு களித்துக் கொண்டே செல்ல லாம். எங்கெங்கெல்லாம் எழில் கொதித்து நிற்கின்றதோ அங்கங்கெல்லாம் தமிழ்க் கடவுள் முருகன் எழுந்தருளி யிருப்பான் என்பது தமிழரது சமயக்கொள்கை திரு. வி. க. வின் முருகன் அல்லது அழகு' என்ற நூலில் இது விளக்கப் பெற்றிருப்பதைப் படித்து மகிழலாம். மாயோனும் (திருமாலும்) தமிழ்க் கடவுள்தானே? "மாயோன் மேய காடுறை உலகமும்’ (தொல் - பொருள் - அகத் - 5) என்று அவனைத் தொல்காப்பியமும் குறிப்பிடுகின்றதன்றோ? முருகனும் திருமால் மருகன் அன்றோ? ஆகவே, திருமாலும் அழகான இடங்களில் கோயில் கொண்டுள்ளார் என்பதைக் காண்கின்றோம். இத்தகைய அழகான இடங்களில் பூ வைப் பூ, காயாம் பூ, நீலோற்பலம், செங்கழுநீர்ப்பூ இவை மலர்ந்து காட்சி அளிக்கின்றன. இந்தப் பூக்களைக் கண்டதும் நம்மாழ்வாரின் உயிரும் உடம்பும் ஒருங்கே மலர்ச்சி பெற்றுப் பூரித்துப் போகின்றன. அந்த உணர்ச்சி, பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற காவிமலர் என்றும் கண்தொறும்-பாவியேன் மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும் அவ்வவை எல்லாம் பிரான்உருவே என்று - பெரி.திருவம்,73 (பூவை - ஒருவகை மலர் காவி - செங்கழுநீர்ப்பூ, ஆவி உயிர் மெய்-உடல்: பூரிக்கும் - பருத்து வளரும்) என்று பாட்டாக வடிவம்பெறுகின்றது. எம்பெருமானுடைய திவ்விய மங்கள வடிவம்தான் இப்படி வந்து காட்சி தரு கின்றது. இது வெறும் பிரமையே என்று தோன்றினாலும், அறிவு எச்சரித்தாலும், ஆழ்வாரது பக்திக் கண்களுக்கு அவை அப்படியே தென்படுகின்றன. அறிவின் எச்சரிக்கையையும் புறக்கணித்துப் பிரமையே மேல் என்று அவரது உணர்ச்சி தூண்டுவதால் அந்தப் பிரமையிலேயே அவரது உள்ளம் தோய்ந்து ஒன்றி நின்று பேரின்பத்தை அடைகின்றார் o ஆழ்வார்.