டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா
89
வாய்ப்பான தருணத்தில், வசமாக கணுக்காலைப் பிடிக்கும் அமைப்பையே சிறந்த முறை என்கின்றனர்.
காலைப் பிடிக்கும்பொழுது, ஒரு குச்சியை அல்லது கம்பைப் பிடிக்கின்ற தன்மையில் அமைய வேண்டும் என்பதை படம் பார்க்கவும். அதில் எளிதில் கைப்பற்றுதல் போல காலைப் பிடித்திருக்கும் முறையைக் காண்க.
- ‘ஒடுமீன் ஒட உறுமீன் வருமளவும்
- வாடியிருக்குமாம் கொக்கு’
என்னும் பாடலைப்போல பாடி வருபவர் எப்படி ஆடி ஒடிப் பாய்ந்தாலும், நல்ல தருணம் வரட்டும் என்று சலிப்பில்லாமல் காத்துக் கொண்டிருந்தவாறு, சரியான நேரத்தில் பிடித்துவிட, உடல் உறுப்புக்களில் நல்ல ஒருங்கிணைந்த செயலாற்றல் (Co–ordination) தேவை. இல்லையேல், எளிதாக கைப்பிடியிலிருந்து காலை உருவிக்கொண்டு, பாடியவர் தப்பித்துப் போய்விடக் கூடும்.
கணுக்காலை நன்கு பற்றிய பிறகு, பிடிபட்டவர் தனது பிடிபட்ட காலை வேகமாகப் பின்புறமாக உதைத்து, தப்பித்துக்கொண்டு போக முயற்சிப்பார். காலைப் பிடித்தவாறே இருந்தால், அவர் மேலும் உதைத்து, அந்தப் பிடியிலிருந்து வெளியேறவும் துணிவார். அந்த விடுதலை பெறும் நிலைமைக்கு அவரை விடாது, காலைப் பிடித்த உடனே, சற்று மேலே தூக்கிப் பிடித்துவிட்டால், அவர் சமநிலை இழப்பார். கீழேவிழ அவரது வேகமும் குறையும்.
அப்படி முடியாவிடில், கணுக்காலை தரையுடன் கீழே அழுத்தினால் அவர் கீழே விழ நேரிடும். அதனால்