பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



-173 - தெலுங்கு நாட்டிலுள்ள வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் விசய வாடையில் (Bezwada) - காணப்படும் யுத்த மல்லனது கல்வெட்டிலுள்ள தெலுங்குச் செய்யுட்களே எல்லாவற்றிற்கும் முந்தியனவாய் மிகப் பழமை வாய்ந்துள்ளன என்றும் அவை இயற்றப்பெற்ற காலம், கி.பி. பத்தாம் நூற்றாண்டாக விருத்தல் வேண்டும் என்றும் கருதி வந்தனர்.. பின்னர், மேற்குறித்த ஆதங்கிக் கல்வெட்டுக் கிடைக்கவே, அதிலுள்ள ஒருதெலுங்குச் செய்யுளைக்கண்டு அது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் இயற்றப்பெற்றதாதல் வேண்டும் என்றும், தெலுங்குமொழியில் செய்யுள் இயற்றத் தொடங்கிய காலமும் அதுவே யாகும் என்றும் உணர்ந்து பெருமகிழ்ச்சியுற்றனர். ஆந்திரரது தாய்மொழிப் பற்று நம்மனோர் நன்குணர்ந்து பின்பற்றுதற்குரியதொன்று. முதலில் செய்யுள் தோன்றியகாலம் யாதென ஆராய்ந்து காணமுடியாத அத்துணைத் தொன்மையும் பெருமையும் வாய்ந்த நம் தமிழ்மொழியைத் தாய் மொழியாகக் கொண்டுள்ள நம்மனோர், கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டிற்கு முன்னர் இயற்றப்பெற்ற செய்யுளே இல்லாத தெலுங்கு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டுள்ள ஆந்திரர்பாற் காணப்படும் தாய் மொழிப்பற்றைப் பார்த்தாயினும் தாய்மொழித் தொண்டில் ஈடுபட்டு உண்மைத் தொண்டாற்று வார்களாக! இனித் தெலுங்கு மொழியில் இயற்றப்பெற்ற முதல் செய்யுள் நூல் நன்னயப்பட்டர் எழுதியுள்ள மகாபாரதமாகும். இதற்கு முந்திய செய்யுள் நூற்கள் அம்மொழியில் இல்லை என்று அம்மொழியில் வல்ல அறிஞர்கள் கூறுகின்றனர். மகாபாரதத்தைத் தெலுங்கு மொழியில் செய்யுளாக எழுதிய நன்னயப்பட்டர் என்பார் கி. பி. 1022 முதல் கி.பி. 1063 வரையில் கோதாவரி கிருஷ்ணை என்ற இருபேராறுகளுக்கும் இடையிலுள்ள வேங்கை நாட்டில் ஆட்சிபுரிந்துகொண்டிருந்த கீழைச் சளுக்கிய மன்னனாகிய முதல் இராசராசனது அவைக்களப் புலவராக விளங்கியவர். ஆகவே, இவ்வாசிரியர் வாழ்ந்தகாலம் கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதியாகும். எனவே தெலுங்குமொழியில் செய்யுள் நூல் முதலில் தோன்றிய காலமும் கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதியே யாகும் என்பது நன்கு வெளியாகின்றது. நம் தமிழ்மொழியிலுள்ள சிறந்த இலக்கியங்கள் எல்லாம் கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டிற்கு முன்னரே இயற்றப் பெற்றவை என்பது ஈண்டு யாவரும் அறிந்துகொள்ளுதற் குரியதொன்றாம். 3. சேனாவரையர். தொல்காப்பியத்திற்கு இளம்பூரணர், கல்லாடர், தெய்வச்சிலையார், சேனாவரையர், நச்சினார்க்கினியர், பேராசிரியர் முதலானோர் உரை எழுதியுள்ளார். சேனாவரையரது 13