பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுப்பட்டால் 25 என்கிற ஏக்கந்தான். பாவிப் பொண்ண, கண்கொண்டு பார்க்க முடியாமல் கண்ணு உள்ளுக்குப் போயிட்டுது. கன்னம் பள்ளமாயிட்டுது. அழுது அதிேதி: கண்ணே கண்ணிர்ல கரைஞ்சது மாதிரி ஆயிட்டுது.' முத்தம்மா, நான் ஒன்று சொல்றேன்: கேட்பியா?" சொல்லுங்க அய்யா!' அப்படியே என் மகளை நான் பார்க்க முடியாமல், இன்னைக்கே என் உயிரு போயிட்டுதுன்னா, பானுகிட்டே சொல்லு. அப்பாவுக்கு ஒன்மேல கோபம் இல்லியாம்மா. சாகும்போதுகூட ஒன்னை நெனைச்சுட்டுத்தான் செத்தா ராம்ன்னு சொல்லு... சொல்வியா முத்தம்மா?’’

அய்யா. அய்யா... இதைவிட நீங்க என்ன கொன் னுடலாம். ஆண்டவன். என்ன என்ன வார்த்தை கேட்கும் படியா வச்சுட்டான்...'

5 மகளைப் பார்த்துவிட வேண்டும் என்ற வைராக்கியத் தாலோ அல்லது இயல்பாகவோ, டாக்டருடைய நாட்குறிப் பையும் தாண்டி, தணிகாசலம் மறுநாளும் பிழைத் திருந்தார். ஆனாலும் முன்பைவிட அதிகமாய் பலவீனப் பட்டிருந்தார். நீரிழிவும் ரத்த அழுத்தமும், அரசியல் கட்சிகள் போல் கூட்டணி வைத்து, அவர் உயிரை தொகுதி உடன்பாடு செய்து, துண்டாடிக்கொண்டிருந்தன. அவர் கட்டிலில் மல்லாக்கப் படுத்து சுழன்ற தலையை வைத்து சுழலாத மின்விசிறியை சுழல்வதாக நினைத்துக்கொண் டிருந்த சமயம். மகள் வருவாளோ மாட்டாளோ என்று மனம் அல்லாடிக்கொண்டிருந்த நேரம் மகளின் வருகையை