பக்கம்:சந்தனப் பேழை (கவிதை).pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்தனப் பேழை

11




இறங்கிவரும் பேராறு பிறருக் காக
எதிர்த்திசையில் செல்வதில்லை; இந்தச் சிங்கம்

மறந்துந்தன் கொள்கைகளைப் பிறருக் காக

மாற்றியது கிடையாது; வல்வில் ஒரி

குறிதவறி அடித்ததில்லை; பெரியார் பேச்சுக்

கூரம்பு தாக்காத தலைவர் இல்லை.

பொறிபறக்கும் இவர்பேச்சு நெருப்பில், சிக்கிப்

பொசுங்காத புராணங்கள் எவையும் இல்லை.


அரிக்கின்ற வைதிகப் படையைப் போக்கும்
அருமருந்து பெரியாரே, இவர் வயிற்றில்

செரிக்காத உணவுமில்லை; இவர் நுணுக்கச்

சிந்தனைகள் துளைக்காத துறையு மில்லை.

இருக்கின்ற காலத்தில் இந்த நாட்டில்

இவரைப்போல் புகழ்பெற்ற தலைவர் இல்லை.

இறப்பதற்கு முன்பாக இந்த நாட்டில்

இவரைப்போல் சாதித்தோர் எவரு மில்லை.