112
அறிஞர் அண்ணா
காகப் : யோசனையல்ல, கட்டளை.
சிவா : சிவாஜிக்கு கட்டளை பிறப்பிக்கும் துணிவு...!
காகப் : ஆரியருக்கு உண்டு; அவர்கள் பூதேவரானதால்.
சிவா : கட்டளையை மறுக்க முடியும் என்னால்.
காகப் : முடியாது! மறுத்தால் முடி கிடையாது.
சிவா : முடியாதா? என்னால் முடியாதா? காகப்பட்டரே உற்றுப்பாரும், யார் என்று பாரும்!
காகப் : வீராதி வீரன்! அதனால் என்ன? நீ சாஸ்திரத்துக்குச் சம்மதித்தே ஆகவேண்டும்.
சிவா : முடியாது என்றால் என்ன செய்வீர்?
காகப் : நானா! என்ன செய்வேன்? சரி என்று கூறி விட்டுப் போய்விடுவேன். ஆனால் முடியாது என்று சொல்லி வாய்மூடுமுன் தெய்வத்தின் சாபம் உன்னைத் தீண்டும்.
சிவா : என்னை மிரட்டுவது முடியாத காரியம். என் ராஜ்யத்திலே என் இஷ்டப்படி நடக்க எனக்கு உரிமை உண்டு.
காகப் : உண்மை! உதாரணமாக நீ என்னைக் கொன்றுவிடக்கூட அதிகாரம் உண்டு. செய்து பார்.
சிவா : காகப்பட்டரே! சிவாஜியின் சித்தம் கலக்கத்தை அறியாதது. கொன்றால் என்ன நடந்துவிடும்?
காகம் : என்ன நடக்கும்! என் உயிர் போகும். ஆனால் என் பிணம் வேகுமுன் உன் ராஜ்யம் சாம்பலாகும்.
சிவா : எவ்வளவு ஆணவம்?
காகப் : யாருக்கு?
(சிவாஜி மௌனமாக)
சிவா : என்னென்ன சடங்குகள் நடை பறவேண்டும்?