50
அறிஞர் அண்ணா
அப்படியில்லேடா இப்படி...
(புன்சிரிப்பு)
பகதூர் : வரலியே பாலாஜி!... புன்சிரிப்பு வாண்ணா வரும்; போண்ணா போகுமோ? நான் புன்சிரிப்பா இருக்கத்தான் பார்க்கறேன்... முடியலியே.
பாலாஜி : முடியலியா? அரை வீசை அல்வாண்ணா ஒரேயடியா விழுங்க மட்டும் தெரியுமா?
(பகதூர் சிரிக்க)
ம்....அதேதான்....அதேதான் புன்சிரிப்பு...
பகதூர் : இதா புன்சிரிப்பு...?
பாலாஜி : பாடத்தைச் சொல்லு.
பகதூர் : முக்கனியே! சக்கரையே! தேனே! பாலே!
பாலாஜி : ஏண்டா நிறுத்திட்டே?
பகதூர் : திரை இருக்கே.
பாலாஜி : திரை இன்னும் எடுக்கல்லையா?
(திரையை எடுத்ததும்)
பகதூர் : உன்னை நான் பெறாவிட்டால் என் உயிர் போகும்.
பாலா : ஏண்டா உயிர் போகும்ணு சொல்லிக்கிட்டு மரம்போல நிண்ணா மங்கையோட மனசு இளகுமா? உயிர் போகும்னு சொல்லும் போதே உயிர் போயிட்டா மாதிரி ஆயிடவேணாமா?
பகதூர் : எங்கே?
பாலாஜி : தோ பார்ரா! முக்கனியே! சக்கரையே! தேனே! பாலே! இப்படியே சொல்லிக்கிட்டே அருகே போகணும். நீ போகும் போது அவ விலகுவா. வெலகுற மாதிரி பதுமையைக் கொஞ்சம் கொஞ்சம் நகத்து.