52
அறிஞர் அண்ணா
பகதூர் : சாமி கதைப் படிச்சா?
பாலாஜி : நம்ம சாமி கதையே காதல் களஞ்சியண்டா! ஒரு கதை படிக்கிறேன், கவனமாய்க் கேளு. கேக்கறியா? படிக்கட்டுமா?
பகதூர் : படி பாலாஜி.
பாலாஜி : ஓ... மாதர் திலகமே.
பகதூர் : யாரைக் கூப்பிட்டே?
பாலாஜி : டே! படிக்கிறேன். ஒ, மாதர் திலகமே! இந்த ஈரேழு பதினாலு லோகத்திலும் உன்னைப்போல் ஒரு அழகியைக் கண்டதில்லை. டேய், கேக்கறியா?
பகதூர் : ஒ! கேக்கறேனே!
பாலாஜி : என்ன சொன்னான்!
பகதூர் : அவன் சொல்றான்!
பாலாஜி : என்னடா சொல்றான்?
பகதூர் : என்ன சொல்றான்?
பாலாஜி : இந்த ஈறேழு பதினாலு லோகத்திலும் உன்னைப்போல் ஒரு பெண்ணை, அழகியைக் கண்டதில்லைன்னு சொல்றான். இவன் போய்ப் பார்த்தானா; ஈரேழு லோகத்தையும்.
பகதூர் : நான் என்ன, அவன் கூடவா போனேன்! என்ன வந்து கேக்கறியே!
பாலாஜி : சும்மா புளுகுடா! காதல்கதை படிக்கும் போது நெஜத்தைவிட புளுகுதாண்டா அதிகமா கலக்கணும்!
பகதூர் : படி பாலாஜி !
பாலாஜி : ஓ மாதர் திலகமே! காந்த சக்தியால் இழுக்கப்படும் துரும்புபோல் ஆகிவிட்டேன். காந்தாமணி உன்னை