சந்திரமோகன்
65
கேசவப் : ஓய்! நீர் பேசுவதைப் பார்த்தால் விபரீதமாக இருக்கிறதே. சிவாஜி பட்டாபிஷேகம் செய்து கொள்வதற்குக் காகப்பட்டரின் சம்மதத்தை எப்படியாவது பெற்று வருவதாகக் கூறினீர் அவனிடம்.
பாலச்சந் : ஆமாம்! அவனிடம் சொன்னேன். அசடு ஓய் நீர்! சொன்னால்?
கேசவப் : அப்படி என்றால்?
பாலச்சந் : ராஜ்யம்... பூஜ்யம் ஓய்! பூஜ்யம். அவா ஆசையிலே மண் விழச்செய்கிறேன். வாரும். (போகிறார்கள்)
காட்சி - 14
இடம் : ஆஸ்ரமம்.
உறுப்பினர்கள் : காகப்பட்டர் - ரங்குபட்டர் - சிஷ்யர்கள்.
(சிஷ்யர்கள் வேதம் ஓதிக்கொண்டிருக்கின்றனர். காது கொடுத்துக் கேட்கமுடியாத நிலையில் ரங்கு வந்து..)
ரங்கு : ஏண்டாப்பா பிரகஸ்பதிகளே! காது குடையறது! போதும், நீங்க போட்ட கூச்சல். அரிதுயில் செய்யும் ஸ்ரீமன் நாராயணமூர்த்தி காதில் கூட விழுந்திருக்கும். போதும்; நிறுத்திவிட்டுப் போய் சமையல் காரியத்தைக் கவனியுங்கோ. சதா சர்வ காலமும் ஆகா ஊகூண்ணு கூவிண்டிருக்கிறது போதும்... போங்கள்...
சிஷ்யன் : குரு பாடம் படியுங்கள் என்கிறார்...
ரங்கு : இப்போ இந்த குரு சொல்றார்; போதும், நீங்கள் பாடம் படிச்சதுண்ணு. எழுந்திருங்கள். மகா பெரிய ஞானஸ்தாள்தான்.
(சீடர்கள் போக)
தலைவலி வந்துடறது இங்கே. காலை முதல் மாலை வரை ஒரே காது குடைச்சல். இந்தப் ப்ரகிருதிகள் ப்ராணனை