சந்திரமோகன்
71
காகப் : ரோஜா மட்டுமல்ல. அது வாடாத மல்லி.
ரங்கு : பொருத்தமான உபமானம். அது வாடாத மல்லிகை தான்.
காகப் : அதுவும் நாம் தேடாதது.
ரங்கு : ஆமாம்! அதைப் பெற நாம் அலைந்து தேடி அலுப்பதில்லைதான்.
காகப் : அப்படிப்பட்ட ஆரிய வாழ்வை அற்பமென்று கருதினாயே!
ரங்கு : நான் அசடன் குருவே. அண்ட சராச்சரங்களிலும் ஆரிய யோகத்துக்கு ஈடேதும் கிடையாது என்பதை இப்போது அறிந்து கொண்டேன்.
காகப் : தன்யனானாய் ரங்கு! தலைமுறை தலைமுறையாக நமக்குக் கிடைத்துள்ள இந்த வாழ்வு சாமான்யமானதல்ல; சகலருக்கும் சித்திக்கக் கூடியதுமல்ல...
ரங்கு : குருதேவா! அதிக உபதேசம் ஏன்... ஆரியம் சாமான்யமானதல்ல. அது விலையில்லா மாணிக்கம்; முதலில்லா வியாபாரம்.
காகப் : டேய், ரங்கு! அசடே!! முதலில்லா வியாபாரம் என்று சொல்லாதே. அர்த்தம் அவ்வளவு நன்னா இராது.
ரங்கு : வெளியே சொல்வேனா குரு. நமக்குள் கூறிக் கொண்டதுதானே.
காட்சி - 15
இடம் : பாலாஜி வீடு
உறுப்பினர்கள் : பாலாஜி, பகதூர்.
பாலாஜி : பகதூர்! பாடங்களை விரைவாய் கற்றுக் கொள்ளணும், தெரிந்ததா? இப்படி நெட்டை மரம் போல் நின்று கொண்டிருந்தாயோ, இந்துமதியை அவன் தட்டிக்கிட்டுப் போய்விடுவான்.