84
அறிஞர் அண்ணா
சொர்ண மாளிகை என்ற பெயர் பொருத்தமாக இராதோ?
1. தளபதி : நமது சிவாஜி மகாராஜாவுக்கு ஜெயச் சின்னமாக அந்த மாளிகை இருக்கப் போகிறது. அதனால் ஜெயவிலாசம் என்ற பெயர் பொருத்தமாக இருக்கும். நாம் கூறிக் கொண்டே போவானேன்? அவருடைய உத்தரவு எப்படியோ?
சிவாஜி : நான் அதைப்பற்றி யோசித்துக் கொண்டிருக்கவில்லை, மகுடாபிஷேகம் நடைபெறுவதற்கு முன்பே தாங்களெல்லாம் மகாராஜா என்று அழைக்கிறீர்களே, எவ்வளவு ஆழ்ந்த அன்பு உங்களுக்கு என்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
(மோகன், வீரர்கள் ஒடிவருகின்றனர்)
ஏன், என்ன செய்தி? எதிரிப் படைகளா?
மோகன் : எதிரிகளிடம் படையில்லை, மகராஜ்... தடை விதித்திருக்கிறார்கள்...
சிவாஜி : தடையா? என்ன? யார்?
வீரன் : மகராஜ்! பட்டாபிஷேகம் நடக்கக்கூடாதாம்.
சிவாஜி : சொன்னவன் யார்?
மோகன் : பிணமாகாமல்தான் இருக்கிறார்கள். அந்தப் பித்தர்கள்.
சிவாஜி : அமைதியாகப் பேசுங்கள். பட்டாபிஷேகத்தைப் பாதுஷாவின் ஆட்கள் தடுக்கின்றனரா?
மோகன் : அவர்கள் துணியவில்லை மகராஜ்! அவர்களுக்கில்லை அந்தக் கெடுமதி. மொகலாயர் வீரத் தலைவனை மதிக்கின்றனர். ஆனால்...
சிவாஜி : ஆனால்! என்ன அது ஆனால்?
வீரன் : முகூர்த்தம் குறிக்கும்படி புரோகிதரைக் கேட்டோம்.