90
அறிஞர் அண்ணா
(பாலாஜியும், சாந்தாஜியும் போக பகதூர் பாடத்தை ஆரம்பிக்கிறான்.)
பகதூபூர் : மயிலே! குயிலே! மானே! தேனே! மதிமுகவதி! கலர்முகவதி!...
இந்து : இது என்ன அஷ்டோத்திரமா? சகஸ்ரநாமமா?
பகதுர் : இல்லை...வந்து...
இந்து : என்ன இல்லை. பாலாஜி கற்றுக் கொடுத்த பஜனையோ? ஏன் மறைக்கிறீர்? எனக்கும் இஷ்டம்தான் கூறும்.
பகதூர் : இந்து!
இந்து : ஏன்?
பகதூர் : ஒன்றுமில்லை.
இந்து : அவர்கள் போய்விட்டார்கள் என்று பயமா? பயப்படாதீர்கள். நான் பகலிலே இப்படியே தானிருப்பேன். பாதி ராத்திரியிலேதான்....
பகதூர் : பாதி ராத்திரியிலே என்ன இந்து அது?
இந்து : ஏன் உங்களுக்குத் தெரியாதா? பாலாஜி சொல்லவில்லையா?
பகதூர் : என்ன இந்த விஷயம்? எனக்கு ஒன்றும் தெரியாதே?
இந்து : தெரியாதா? விளையாடுகிறீர். தெரியாமலா இருக்கும். தெரிந்துதான் இருக்கும். பாலாஜி சொல்லி இருப்பாரே.
பக : அந்தப் பாழாய்ப்போன பாலாஜி ஒன்றுமே சொல்லவில்லையே. பாதி ராத்திரியிலே என்ன நடக்கும்? சொல்லேன்...
இந்து : சொல்ல முடியாது. சொன்னால் நீங்களும் என்னைக் கல்யாணம் செய்து கொள்ள முடியாது என்று சொல்லி விடுவீர்கள்.