சந்திரமோகன்
91
பக : எனக்கொன்றும் விளங்கவில்லையே!
இந்து : நான் அழகாக இருக்கிறேனா, இல்லையா?
பக : ரதி போல இருக்கிறாய்!
இந்து : இருக்கிறேனல்லவா? நடுஜாம மணி அடித்ததும்...
பக : அடித்ததும்?
இந்து : ஊகூம்... நான் சொல்ல மாட்டேன்.
பக : நான் சாந்தாஜியைக் கூப்பிடுகிறேன். எனக்கு இங்கிருக்கப் பிடிக்கவில்லை.
இந்து : ஏன் வந்தீர்கள்?
பக : அதுவா இந்து? நான் உன்னைக் காதலிக்கிறேன்.
இந்து : காதலியுங்களேன். அதனால் என்ன?
பக : உன்னுடைய அழககைக் கண்டு...
இந்து : மயங்கிவிட்டிருப்பீர்கள்.
பக : இல்லை அழகைக் கண்டு, அன்பு கொண்டு, உன்னைத் தவிர வேறொரு மங்கையைக் கனவிலும் கருதுவதில்லை என்று தீர்மானித்து விட்டேன். முக்கனியே! சக்கரையே! தேனே! பாலே! உன்னை நான் என் உயிர் போலக் காதலிக்கிறேன்.
இந்து : இவ்வளவுதானா? இன்னும் ஏதாவது உண்டா?
பக : இந்தச் சோலையிலே...
இந்து : மாலையிலே உலாவுகிறோம்.
பக : என்னைக் கணவனாக ஏற்றுக் கொள்ளச் சம்மதமாக் கண்ணே?
இந்து : எனக்குச் சம்மதந்தான். வேறு யார் இவ்வளவு தைரியமாக என்னைக் கல்யாணம் செய்து கொள்ள முன்வருவார்கள்?