94
அறிஞர் அண்ணா
ஏற்பட்டு விட்டதே. நானும் துடுக்குத் தனமாகப் பேசி விட்டேன். அவர் எவ்வளவு கோபமாகப் போய்விட்டார் பார்த்தீர்களா? நான் என்ன செய்வேன்.
சாந் : கிணறு வெட்ட பூதம் புறப்பட்டது போல் ஆகிவிட்டது. இனிமேல் நான் என்ன செய்வேன்? அந்தப் பாலாஜி யோசனையால் கெட்டேன்.
இந்து : அப்பா!
காட்சி - 20
இடம் : இந்துமதி தனிஅறை
உறுப்பினர்கள் : இந்துமதி.
(இந்துமதி தனிமையில் சோகமாய்ப் பாடுகிறாள்)
காட்சி - 21
இடம் : தர்பார்
உறுப்பினர்கள் : சிவாஜி, மோகன், தளபதிகள், வீரர்கள்.
(கோட்டை உடைத்தல்)
1. தள : காகப்பட்டரின் மறுமொழி கிடைத்துவிட்டதாமே? சாஸ்திர சம்மதம் பெற மார்க்கம் இருக்கிறதாமே?
சிவாஜி : ஆமாம்! சூத்திரனை க்ஷத்திரியனாக்குகிறாராம். அதற்கு ஒரு சடங்கு இருக்கிறதாம்.
மோகன் : பறவைக்கு இறக்கையை ஒட்டிவிடப் பார்க்கிறார்கள். சூட்சி பலித்துவிட்டது.
சிவாஜி : இதிலே சூட்சி என்ன இருக்கிறது? அவர்கள் சாஸ்திரத்தைத் தானே கூறுகிறார்கள்?
மோகன் : ஆமாம் சாஸ்திரத்தை தான். ஆனால் யாருடைய சாஸ்திரம்? எதிரிகளிடம் இந்த நாடு சிக்கிய போது, அந்த சாஸ்திரம் உதவவில்லையே? யாரும் அதன் துணையைத்