பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

செயல்கள் கழகத்தின் கொள்கையில் ஒன்றாக இருக்குமானால் இப்போதே நான் கழகத்தின் மெம்பர் சிப்பை ராஜினாமா செய்கிறேன். (போகிறான்)

சாம்: என்ன அது? கழகத்தின் கொள்கை இதுவென்று யார் கூறியது? நமக்குள் தானே தனிப்பட பேசிக் கொண்டிருந்தோம்.

தங்க: ஒழிந்தது பீடை!

கோத: நாளை உன் தகப்பனார் திதிக்கு அவன் மாமனார்தான் வரப்போகிறார் புரோகிதராக.

தங்க: தெரிந்து விட்டது பிரம்மஹத்திக்கு! வாருங்கள் போகலாம்.

—◯—

[லலிதா பானுவிடம் நடனம் கற்றுக்கொள்கிறாள்.வரதன் வந்து நின்று கவனிக்கிறான்.]

லவி: என்னடி பானு பாடுகிறேன். ஆடிக்காட்டு.

“என்னடியே சகி இன்னமும் வரக்காணேன்”.(என்று பாட பானு ஆடிக்காட்டி பாதியுடன் நிறுத்துகிறாள்)

லலி: பானு? இன்னைக்கு இதுவரை போதும். பாக்கியை நாளைக்கு வந்து சொல்லித் தரணும்.

பானு: சரி. (போனபின் பின்னால் வந்து நின்று கவனித்த வரதன்)

வர: லலிதா மாமி! நான்வந்து அரைமணி நேரமாகுது.

லலி: நான் யாரும் வரலேன்னு நெனைச்சேன்!

(முகத்தை சுளிக்கிறாள்)

வர: என்ன மாமி! மனக்கஷ்டம்? சௌக்கியந்தானே?

லலி: சௌக்கியமா இருக்கேன். எனக்கென்ன?

வர: பின்ன மாமாவுக்கு ஏதாவது......?

லலி: அவருக்கென்ன? வளவளப்பான மேனி! மன்மத லட்சணம்!