பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

வாஞ்: ஆமப்பா அடியே நீ சும்மா போடி! (கையை ஓங்குகிறார்)

வீரன்: என்ன? என்ன அய்யரே?

லலி: இவருக்கு இப்படித்தாங்க இருந்து இருந்தாப்போல வலுப்பு வரும்.

வீரன்: அப்ப— நீங்க போங்கம்மா.நான் கவனிச்சுக்கிடுறேன். கரண்டிக் காம்ப காயவச்சு ரெண்டு இழு இழுத்துவிட்டுறேன். அப்புறம் இந்த மாதிரி வலுப்பு வரவே வராது.

லலி: வேண்டாங்க! நானே இழுக்கிறேன். நீங்க போயிட்டு வாங்க!

வீரன்: (லலிதாவை நோக்கியபடி)அப்போ... நான் போயிட்டு அப்புறமா வரவா? சரி... வர்ரேன். (போகிறான்)

லலி: (வாஞ்சிநாதரிடம்) ஏன் இப்படி என் மானத்தை வாங்குறேள்? இப்பவே என் பெறந்த ஆத்துக்குப் போய்த் தொலையறேன். (வேகமாகப் போகிறாள்)

வாஞ்: அடியே வேண்டாண்டி! வேண்டாண்டி!

(அய்யர் பின்னாலே ஓடுகிறார். வரதன் சிலையாக நிற்கிறான்.)

—-◯—

(கோதண்டம், தங்கவேல் இருவரையும் வாஞ்சிநாத சாஸ்திரி சந்திக்கிறார்)

கோ: அய்யரே! ஒரு டிக்கட் கொடுங்க,

வாஞ்: டிக்கட்டா? என்ன?

தங்க: மோட்சத்துக்கு ஒரு டிக்கட்.

வாஞ்: விநாசகாலே சர்வ நாசம்னு மந்திரம் சொல்லுது.

கோ: ஏன் சொல்லுது?