பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

தங்க: அவரு வாய் என்ன சாமான்யமா? ஊரு சொத்துக்கு அது வாசப்படியாச்சே!

வேதம்: ஊருல இருக்கிறவகளுக்காக உழைக்கிறவரப்பா இவரு.

கோத: வீட்டுல இருக்கிற அம்மா அகலிகை.....

தங்க : இவரும் ஊருக்கு உழைக்கிறாரு. அம்மாவும் ஊருக்கு உழைக்குது ! இதுல என்னப்பா இருக்கு?

(வாஞ்சிநாதர் மிரட்சியுடனும், கோபமுடனும் வெளியேறுகிறார்)

—-◯—

வாஞ்: தெரியுமா துரைராஜ் சங்கதி?

துரை: என்ன?

வாஞ்: சாம்பசிவம் என்னை அடித்தான்ல? போலீஸ்ல சொன்னேன். கொண்டுபோய் ஒரு வாரம் உள்ளே தள்ளீட்டா.

துரை? ஐயர்வாள் ! உமக்கு பரம திருப்திதானே?

வாஞ்: பின்னே அடிக்கலாமோ?

துரை: சாம்பசிவம் மட்டும் அடித்தானா? ரெண்டுபேர் சேர்ந்து அடித்தார்களா?

வாஞ்: ரெண்டுபேர் சேர்ந்துதான். அவா ஆம்பிடலே! இவனுக்கு அவா தண்டணையையும் சேர்த்து ஒரு வாரம் போட்டுட்டா.

துரை! ஒருவாரம்தானே. பரவாயில்லை. இதற்காக கஷ்டப்பட மாட்டான் சாம்பசிவம். அது சரி...அடி பலமா?

வாஞ்: ஏதேது — இன்னும் கொஞ்சம் நேரம்போனா அடி பலமா, வலி பலமான்னு கேட்பே போலிருக்கே?

துரை: சும்மா சொல்லுங்கோ.

வாஞ்: சாம்பசிவம் வெளியே வந்தவுடனே கேளு. சொல்லுவான்.